Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி அருகே பயங்கரம்...கடனை திருப்பி கேட்டதால் அத்தையையே அடித்துக் கொன்ற அண்ணன் மகன்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் அத்தையை அண்ணன் மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருச்சி : கடனைத் திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த அண்ணன் மகன், அத்தை மற்றும் அவரது மகனை அடித்தே கொன்றதோடு இருவர் சடலத்தின் மீது டிராக்டர் ஏற்றி சிதைத்துள்ளார்.

மண்ணச்சநல்லூரை அடுத்த வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி இவர் தனது தங்கையிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கித் தந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனது அண்ணன் கஷ்டப்படுகிறார் என்பதைல் வெளிநபரிடம் இருந்து தனபாப்பு கடன் வாங்கி ராமசாமிக்கு உதவியுள்ளார்.

ஆனால் கடனைத் திருப்பி செலுத்த முடியாத சோகத்தில் இருந்த ராமசாமி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த தனபாப்பு, வெளி நபர்கள் கடனைத் திருப்பி கேட்டதால் தனது அண்ணன் ராமசாமியின் மகன் ராஜகோபாலிடம் பணத்தை கேட்டுள்ளார்.

வாய்த்தகராறு

வாய்த்தகராறு

தனபாப்பு அடிக்கடி பணத்தை கேட்டு வந்தததால் ராஜகோபாலுக்கும், அவரது அத்தையான தனபாப்புவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனபாப்பு வீட்டிற்கு வந்த ராஜகோபால் அவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து விட்டு சென்றுள்ளார்.

 அடித்துக் கொலை

அடித்துக் கொலை

இந்நிலையில் நள்ளிரவில் மீண்டும் தனபாப்பு வீட்டிற்கு வந்த ராஜகோபால் தனபாப்புவையும், அவரது மகன் சத்யமூர்த்தி அடித்தே கொன்றுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 தீராத ஆத்திரம்

தீராத ஆத்திரம்

ஆனால் அப்போதும் ஆத்திரம் தீராத ராஜகோபால் இறந்தவர்களின் சடலத்தை கொண்டு வந்து வீதியில் போட்டு தனது டிராக்டரை ஏற்றி உடலை நசுக்கியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் டிராக்டரை விட்டுவிட்டு ராஜகோபால் தப்பியோடியுள்ளார்.

 தேடும் போலீஸ்

தேடும் போலீஸ்

இதனையடுத்து உடல்களைக் கைப்பற்றிய லால்குடி போலீசார் தப்பியோடிய ராஜகோபாலை தேடி வருகின்றனர். தனபாப்புவின் மகன் சத்யமூர்த்தி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தாராம்.

 கொடூரமான கொலை

கொடூரமான கொலை

கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தந்தையின் மரணத்தால் ராஜகோபால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாராம். இதற்காக சில மாதங்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பினாராம் ராஜகோபால். இந்நிலையில் கடனைத் திருப்பிக் கேட்டதற்காக உறவினர்களையே கொடூரமான முறையில் கொன்று விட்டு தப்பியோடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+