தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கல்வி தரத்தை உயர்த்துவோம் - பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கல்வி தரத்தை உயர்த்துவோம் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டு வருவதற்குத் தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
75 சதவிகித அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் குழந்தைகள் கட்டாயமாக அரசு பள்ளியில் படித்தாக வேண்டும் என்ற நிலையைக் கொண்டு வரவேண்டும்.

பாஜக ஆட்சி
இந்த மாதிரி அமைப்பைக் கொண்டு வந்தால்தான் அரசுப் பள்ளிகளை நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது கல்வி தரத்தை உயர்த்துவோம். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறைகளைக் கொண்டு வருவதற்குத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

தமிழில் பாஸ்போர்ட்
இந்தியிலும் பாஸ்போர்ட் என்பது குறித்து பலரும் பலவித கருத்துக்கள் கூறி வருகின்றனர். இந்தியிலும் பாஸ்போர்ட் வருகிறது. தமிழில் கொடுப்பது தவறே கிடையாது. ஆனால் பிற இடங்களுக்குப் போகும்போது எந்தளவிற்குப் புரிதல் இருக்கிறது என்ற தெரியவில்லை. ஆங்கிலமும் எல்லா நாட்டிலும் புரிதல் கிடையாது. எது அதிகளவு புரிதல் இருக்கிறதோ அதனைப் பயன்படுத்துவதில் தவறு கிடையாது.

மீனவர்கள் மீது தாக்குதல்
மீனவர்கள் எல்லை தாண்டி போகும்போது இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். நாம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எல்லை தாண்டும்போது கைது செய்யப்படுகிற தமிழக மீனவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் துன்புறுத்தக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம்.

அரசு நடவடிக்கை
இருதரப்பு பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கும், படகுகளை மீட்பதற்கும் இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications