ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை - ஸ்டாலின் பொளேர் பேச்சு!
ஜெயலலிதா வீட்டில் தங்கியுள்ளவர்கள் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் பரவி வரும் நிலையில் ஸ்டாலினின் பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்று கட்சியை கைப்பற்றியுள்ள சசிகலா, அடுத்து முதல்வராக பதவியேற்று ஆட்சியையும் கைப்பற்றப்போவதாக தகவல் பரவி வருகிறது.
இதற்காக கட்சிக்குள் உள்ள அவரது ஆதரவு நிர்வாகிகளை தூண்டிவிட்டு சின்னம்மா புகழ்பாடச் செய்து வருகிறார். செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் சசிகலாதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றும் அவரே முதல்வராக பதவியேற்க வேண்டும் என்றும் தொடக்கம் முதலே கொடி பிடித்து வருகின்றனர்.

அரசியல் களத்தில் பரபரப்பு
மேலும் சசிகலா இந்த மாதத்திலேயே முதல்வராக பதவியேற்க நாள் குறித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு நாளை பதவியேற்பார் என கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

ஜெ.வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக முடியாது
இதனிடையே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் "போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் தங்கி உள்ளவர்கள் எல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை.

ஜனநாயக விதிகளுக்குட்பட்டே..
தமிழக அரசியல் சூழ்நிலையை திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக எந்தவொரு முடிவையும் ஜனநாயக விதிகளுக்குட்பட்டே எடுக்கும்". இவ்வாறு ஸ்டாலின் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் பரபரப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஸ்டாலினின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் கூடுதல் பரபரப்பை கிளப்பியுள்ளது. சசிகலா முதல்வராக அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications