ஆர்.கே.நகர் தாய்க்குலங்களின் ஆதரவு.. சிந்தாமல் சிதறாமல் அள்ளப் போவது யாரு?
சென்னை: இடைத் தேர்தலை சந்திக்கும் ஆர்.கே.நகரில் பெண்களின் வாக்குகளே அதிகம். இதை வைத்துத்தான் அதிமுக அங்கு தொடர்ந்து ஜெயித்து வருகிறது. ஆனால் தற்போது ஜெயலலிதா மறைந்து விட்டதால் இந்த வாக்குகளைக் கவரப் போவது யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா இருந்தவரை ஆர்.கே.நகர் என்றில்லை, பொதுவாகவே தமிழகம் முழுவதும் பெண்களின் வாக்குகளை அதிமுக கவர்ந்து இழுத்து வந்தது கண்கூடு. ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லை. இதனால் பெண்களின் வாக்குகள் யாருக்குப் போகப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா இல்லாத முதல் இடைத் தேர்தல் என்பதால் இனிமேல் பெண்களின் வாக்குகளை பெறப் போவது யார் என்ற புதிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மொத்த வாக்காளர்கள்
கடந்த ஜனவரி 5ம் தேதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி ஆர்.கே.நகர் தொகுதியில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம்.

பெண்கள் 1,34,307
ஆர்.கே நகரில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,28,305 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்க 1,34,307 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 109 பேர் ஆவர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,62,721 ஆகும்.

சசிகலா மீது கோபம்
சசிகலா மீது பெண்கள் கொலை வெறியில் உள்ளனர். குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதி பெண்கள்தான் படு ஆத்திரத்தில் உள்ளனர். ஜெயலலிதா முழுமையாக நம்பியது சசிகலாவைத்தான். ஆனால் அவரோ, ஜெயலலிதாவின் கடைசிக்காலத்தை மர்மமானதாக மாற்றி விட்டாரே என்ற பெரும் ஆதங்கம் பெண்களிடம் உள்ளது.

வாய்ப்பே இல்லை
சசிகலா மீது இன்னும் இங்குள்ள பெண்களுக்கு கோபம் குறையாமலேயே உள்ளது. எனவே நிச்சயம் சசிகலா கட்சியின் வேட்பாளருக்கு பெண்களின் ஆதரவு கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலையே காணப்படுகிறது.

தீபாவுக்கு கிடைக்கலாம்
அதேசமயம், இங்குள்ள பெண்கள் மத்தியில் தீபாவுக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது. குட்டி ஜெயலலிதாவாகவே அவரை பெண்கள் பார்க்கிறார்கள். எனவே ஆர்.கே.நகர் பெண்களின் ஆதரவு தீபாவுக்கு கணிசமாக கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஓ.பி.எஸ்ஸுக்கு போகலாம்
அதேநேரத்தி்ல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் பெண்கள் மத்தியில் கணிசமான கிரேஸ் உள்ளது. அந்த அடிப்படையில் ஓ.பி.எஸ்ஸுக்கும் நிச்சயம் கணிசமான வாக்குகள் பெண்களிடமிருந்து கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

திமுகவுக்கு?
திமுகவுக்கு எந்த அளவுக்கு பெண்களின் வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவில்லை. பெண் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், அதற்காக சொற்ப வாக்குகள் கிடைக்கலாம். ஆனால் தீபா, ஓ.பி.எஸ்ஸே பாதிக்கும் மேலான வாக்குகளைப் பிரித்து விடுவார்கள் என்பதால் திமுகவுக்கு பெண் வாக்காளர்கள் பெரிய அளவில் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications