கலாம் நினைவிடம்.. பெரும் தாமதத்திற்குப் பின்னர் வேலையில் இறங்கிய மத்திய அரசு
ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைப்பதில் நிலவி வந்த பெரும் தாமதத்திற்குப் பின்னர் தற்போது வேலையில் இறங்கியுள்ளது மத்திய அரசு. தற்போது கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றிலும் வேலி போடும் வேலையை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டாக்டர் அப்துல் கலாம் கடந்த ஜூலை 27ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் பிறந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நினைவிடம் அமைக்கப்படும் என பிரதமர் மோடியும், மத்திய அரசும் உறுதியளித்திருந்தனர். இதற்கான இடத்தையும் தமிழக அரசு ஒதுக்கியிருந்தது.

இருப்பினும் கலாம் நினைவிடம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அசுத்தமாக காணப்பட்டது. இதைக் கண்டு கலாம் குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். உடனடியாக நினைவிடம் தொடங்கப்பட வேண்டும் என்று ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தில் குதித்தனர். இதனால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு கேட்ட கூடுதல் இடத்தையும் தமிழக அரசு ஒதுக்கிக் கொடுத்தது. இதையடுத்து நினைவிடம் தொடர்பான பணிகளை மத்திய அரசு தற்போது தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக வேலி அமைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டாக்டர் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் கூறுகையில், கட்டுமானப் பொருட்கள் வந்து சேர்ந்துள்ளன. வேலி அமைக்கும் பணிகள் 15 நாட்களில் செய்து முடிக்கப்படும் என மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நினைவிடப் பணிகளை தொடங்கியுள்ளதற்காக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கலாம் குடும்பத்தினர் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications