Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மயக்கமடைந்த கோமதி.. உண்மையை நிரூபிக்க குமார் போட்ட பிளான்! கதறி அழுத அரசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ஒளிபரப்பான எபிசோடு முழுக்க சிறை, வீடு, கோர்ட் என மூன்று இடங்களிலும் நடக்கும் சம்பவங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, ரசிகர்களை கடைசி வரை பதற்றத்தில் வைத்தது.

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருக்கும் கோமதி, தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் தண்ணீர் குடிக்க முயன்றபோது அவருக்கு நெஞ்சடைத்து, மயக்கமடைந்து கீழே விழுகிறார். அந்த வழியாக வந்த ஒரு போலீஸ் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார்.

Pandian Stores serial vijay tv

டாக்டரின் எச்சரிக்கை

கோமதியை பரிசோதித்த டாக்டர், சுகர், பிபி எல்லாமே ரொம்ப குறைஞ்சிருக்கு. உடனே ஏதாவது சாப்பிட வச்சு, கோர்ட்டுக்கு அழைச்சிட்டு போங்க என்று கூறுகிறார். இந்தப் பக்கம் வீட்டில் மீனா, ராஜி, அரசி மூவரும் தங்களின் பெற்றோரும், சகோதரரும் சிறையில் இருப்பதை நினைத்து அழுதுகொண்டே இருக்கிறார்கள்.

அம்மா, அப்பா எல்லாம் பாவம்... எந்த தப்புமே செய்யலையே, ஏன் இப்படி தண்டனை? என்று அரசி அழுது கொண்டே இருக்கிறார். அவர்கள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்த பழனி, "நீங்க சாப்பிடாம இருந்தா, நைட்டோட நைட்டா அக்கா, மச்சான் எல்லாரையும் வெளிய விட்ருவாங்களா?"
என்று கேட்டு, "நம்ம எந்த தப்பும் பண்ணலைன்னு நமக்கு தெரியும். இதே நேரம் நம்ம எல்லாரும் வீட்டில்தான் இருப்பாங்கன்னு நம்பணும்" என்று மூவரையும் சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறார்.

சரவணனின் மனவேதனை

மறுபக்கம் சிறையில் இருக்கும் பாண்டியன் குடும்பம், மயில் செய்த துரோகங்களை நினைத்து உடைந்து போகிறது. குறிப்பாக சரவணன், "இனிமேல் மயிலுடன் சேர்ந்து வாழவே கூடாது" என்று மனதில் உறுதியான முடிவை எடுத்துக் கொள்கிறான்.

பாக்கியம் நடிப்பு

இந்த நேரத்தில் மயில் வீட்டுக்கு வந்து, புகுந்த வீட்டை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நான் என் வீட்டுக்கு போயிடுவேனா? என்று அப்பாவித்தனமாக கேட்கிறாள். அதற்கு பாக்கியம், அதுக்காகத்தான் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கோம். நீ கவலைப்படாதே என்று சொல்லி அவளை தூங்க அனுப்புகிறாள். ஆனால் இந்த காட்சியில் மயிலின் முகபாவனை ரசிகர்களுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

குமாரின் ஆபத்தான யோசனை

வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் சக்திவேல், முத்துவேல், வரும் குமார், "மயில் குடும்பத்தை மிரட்டி கேஸை வாபஸ் வாங்க வைப்போமா? என்று கேட்கிறான். இதற்கு சக்திவேலும் சம்மதம் தெரிவிக்க, முத்துவேல் மட்டும் "அதெல்லாம் வேண்டாம்... நாளைக்கு கோர்ட்டில் என்ன நடக்குது பார்ப்போம்" என்று தடுக்கிறார்.

Pandian Stores serial vijay tv

மயிலின் குழப்பம்

கோர்ட்டுக்கு வர மறுக்கும் மயிலை பார்த்து பாக்கியமும், மாணிக்கமும் அவளை கடுமையாக அழுத்தம் கொடுக்கிறார்கள். அப்போது வக்கீல், "உங்களை வரதட்சணை கொடுமை பண்ணாங்கன்னு சொல்லணும்" என்று அறிவுறுத்த, மயில் என்ன செய்வது என்று குழப்பத்தில் சிக்குகிறாள்."உன்னை நம்பித்தான் இறங்கியிருக்கோம்... எங்களை ஜெயிலுக்கு போக வச்சுடாத" என்று பாக்கியம் சொல்ல மயில் குழப்பத்தில் நிற்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+