TCS: கீபோர்டு டைப் செய்வது போல் தொடுவாங்க.. என் உடலை அசிங்கமா கிண்டல் செய்வாங்க! அதிரவைக்கும் பெண்ணின் புகார்

Subscribe to Oneindia Tamil

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை மற்றும் மத உணர்வுகளை புண்படுத்திய சம்பவங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஜூலை 2024-ல் டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் அசோசியேட் பதவியில் இணைந்த இந்த பெண், செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2026 வரை தொடர்ந்த பாலியல் தொல்லையால் பயந்து பயந்து வாழ்ந்ததாகக் கூறியுள்ளார்.

பாலியல் தொல்லை மற்றும் உடல் அவமானம்

ஒரு நாள் தற்போது கைது செய்யப்பட்ட ஷாபி ஷேக் எனது அருகில் அமர்ந்து அவருடைய கால்களால் என் கால்களை உரசினார். பின்னர் கீபோர்டை பயன்படுத்துவதாக சொல்லி என்னுடைய அந்தரங்க உறுப்புகளைத் தொட்டார். அதிர்ச்சியடைந்த நான் எழுந்து விலகினேன். இந்த சம்பவத்திற்கு பின்பு ஷாபி ஷேக் சிரித்துக்கொண்ட என்னைவிட்டு விலகி சென்றார் என தெரிவித்தார் அந்த பெண்.

TCS IT TCS Nashik Sexual Harassment TCS Nashik Survivor Statement TCS Nashik Groping Incident TCS Nashik Religious Abuse TCS Nashik POSH Failure TCS Nashik survivor groping allegation TCS Nashik Shafi Sheikh keypad incident TCS Nashik Tausif Attar Hindu gods remarks TCS Nashik sexual harassment survivor statement TCS Nashik BPO unit horror TCS Nashik religious abuse case TCS Nashik body shaming complaints TCS Nashik senior officials protection accused TCS Nashik POSH no complaints claim TCS Nashik 9 FIRs survivor Asif Ansari TCS Nashik harassment TCS Nashik telecaller sexual misconduct TCS Nashik February 2026 Ramayana remarks TCS Nashik workplace scary environment TCS Nashik Ashwini Chainani suspended 9 2026

இதேபோல் பணியில் சேர்ந்த புதியதில் செப்டம்பர் 2024 காலக்கட்டத்தில் ஒரு நாள் பயிற்சி வகுப்பின்போது அசிப் அன்சாரி அவரது மார்பைப் பார்த்து பாலியல் ரீதியான கமெண்ட் செய்தார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அசிப் அன்சாரி, தவுசிப் அட்டார் உடன் சேர்ந்து அவரது உடல் அமைப்பைப் பற்றி தவறாக பேசினார்கள். இந்த சம்பவங்கள் அவருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தின என இப்பெண் தெரிவித்தார்.

இந்த பெண் தற்போது புகார் அளித்த 10க்கும் அதிகமான பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.

மத உணர்வுகளை புண்படுத்திய கருத்துகள்

பிப்ரவரி 2026-ல் தவுசிப் அட்டார் ராமாயணம், மகாபாரதம் படித்ததாகச் சொல்லி, "கடவுளுக்கு எத்தனை மனைவிகள் இருக்க முடியும்? தன் குழந்தையைப் பற்றி கடவுளுக்கு தெரியாதா?" என்று அசிங்கப்படுத்தும் வகையில் கேள்விஎழுப்பினார். இப்படி அவரது கடவுள்கள் மற்றும் தெய்வங்களைப் பற்றி அவதூறாக பேசினார்கள் எனவும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.

இவர்களால் டிசிஎஸ் நாசிக் அலுவலகம் பயங்கரமான இடமாக மாறியதாக அந்தப் பெண் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் எவ்விதமான பயமும் இல்லாமல் செயல்பட்டனர். ஆப்ரேஷன்ஸ் பிரிவின் உதவி பொது மேலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கூட பாலியல் தொடர்பான புகார்களை உயர்மட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர் என்றும் இப்பெண் தெரிவித்துள்ளார். இதனால் நிர்வாகமும் குற்றவாளிகளுக்கு பல வகையில் பாதுகாப்பு அளித்தது என தெரிவித்தார்.

டிசிஎஸ் விவகாரம் தொடர்பாக இதுவரை ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு பெண் உதவி மேலாளர் அஷ்வினி சைனானியும் அடங்குவார். ஒன்பதாவது குற்றவாளி நிதா கான் மும்பையில் இருக்கிறார். அவர் முன் ஜாமீன் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது.

டிசிஎஸ் நிறுவனம் 2022 முதல் 2026 வரை எந்த புகாரும் தங்கள் POSH அமைப்புக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் விசாரணை அதிகாரிகள் பல புகார்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 2022 முதல் 2026 வரையிலான காலத்தில் தான் குற்றங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+