அமெரிக்காவில் சர்வதேச விமான நிலையம் அருகே பயங்கரம்... திடீர் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் சர்வதேச விமான நிலையத்தின் அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் போல அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கு லைசென்ஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் அங்குத் துப்பாக்கி கலசாரம் அதிகமாகவே இருக்கும்.

Shooting in US city Indianapolis 8 Dead including the shooter

துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அமெரிக்காவில் அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாகூட துப்பாக்கி கலாசாரத்தைக் கட்டுப்படுத்த புதிய சட்டத்தைக் கொண்டுவர முயன்றார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டத்தை அவரால் நிறைவேற்ற முடியவில்லை,

இந்நிலையில், மற்றுமொறு துயர சம்பவமாக அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் தற்கொலையால் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எட்டாகப் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு 30க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை ஆராய்ந்த போலீசார், துப்பாக்கியால் சுட்ட நபர் உயிரிழந்துவிட்டார் என்றும் இனிமேல் அங்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இண்டியானாபோலிஸ் நகரின் அருகேயுள்ள ஃபெடெக்ஸ் மையத்தில் நடைபெற்றுள்ளது. அந்த மையத்தில் சுமார் 4000 ஃபெடெக்ஸ் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நல்லவேளையாக அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+