For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
தம்பி மக்கள் பொருள் வெஃகு வாயோ
சாதற் காண வயதினில் அண்ணே?
நம்பி நின்னை அடைந்தவ ரன்றோ?
நாத னென்றுனைக் கொண்டவ ரன்றோ?
எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின்
யாவுந் தான மெனக்கொடுப் பாரே:
கும்பி மாநகரத்தினி வாழ்த்துங்
கொடிய செய்கை தொடர்வதும் என்னே? (202)
குருகு லத்தலை வன்சபைக் கண்ணே,
கொற்ற மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்த்திஅக் கங்கையின் மைந்தன்
பேதை நானும் மதிப்பிழந் தேகத்
திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்
செப்பு மந்திரஞஅ சொல்லுதல் நன்றே!
அருகு வைக்கத் தகுதியு ள்ளானே?
அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே! (203)
நெறி இழந்தபின் வாழ்வதிலின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா.
பொறி இழந்த சகுனியின் சூதால்
புண்ணி யர்தமை மாற்றல ராக்கிச்
சிறியர் பாதகர் என்றுல கெல்லாம்
சீ என் றேச உகந்தர சாளும்
வறிய வாழ்வை விரும்பிடலாமோ?
வறிய வாழ்வை விரும்பிடலாமோ?
வாழி,சூதை நிறுத்துதி என்றான். (204)
(தொடரும்...)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]