For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
நகுலனை இழத்தல்நகுலனை வைத்தும் இழந்திட்டான் - அங்கு
நள்ளிருட்கண்ணொரு சிற்றொளி - வந்து
புகுவது போலவன் புத்தியில் - என்ன
புன்மை செய்தோம்! என எண்ணினான் - அவ்வெண்ணம்
மிகுதவன் முன்பு சகுனியும் - ஐய!
வேறொரு தாயிற் பிறந்தவர் - வைக்கத்
தகுவ ரென்றிந்தச் சிறுவரை - வைத்துத்
தாயத்தி லே இழந் திட்டனை. (26)
திண்னிய வீமனும் பார்த்தனும் - குந்தி
தேவியின் மக்களுனை யொத்தே - நின்னிற்
கண்ணியம் மிக்கவர் என்றவர் - தமைக்
காட்டுதற் கஞ்சினை போலூம் நீ! - என்று
புண்ணியம் மிக்க தருமனை - அந்தப்
புல்லன் வினவிய போதினில் - தருமன்
துண்ணென வெஞ்சின மெய்தியே - அட!
சூதில அரசிழந் தேகினும். (27)
(அடுத்தது பார்த்தனை இழத்தல்)
(தொடரும்...)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]