பட்டாம் பூச்சி புகைப்பட கண்காட்சி
Subscribe to Oneindia Tamil

இந்த கண்காட்சியினை கேரள மாநில காவல்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், வனத்துறை அமைச்சர் பினோய் விஹீ ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
கேரள மாநில மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழும் வண்ணத்துப் பூச்சிகளின் அனைத்து ரகங்களும் இதில் இடம் பெற்றிருந்தன.
இது குறித்து பழனிகுமார் கூறுகையில், தற்போது வண்ணத்து பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன. வண்ணத்து பூச்சிகள் குறித்து நம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
அரியவகை வண்ணத்து பூச்சியினங்கள் அழிவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேடிபிடித்து விதவிதமான பூச்சிகளை படமெடுத்து இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்தேன் என்றார்.
அதில் 200 மேற்பட்ட விதவிதமான வண்ணத்து பூச்சிகளின் படங்கள் இடம் பெற்றிருந்தன.












Click it and Unblock the Notifications