நாகேஷ் இறக்கவில்லை - தமிழ் சினிமாவின் சிரிப்பு இறந்து விட்டது வைரமுத்து
மறைந்த நகைச்சுவைத் திலகம் நாகேஷுக்கு திரையுலகினர் நேற்று பெரும் திரளாக அவரது இல்லத்திற்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நாகேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறுகையில், இந்திய திரையுலகில் நாகேஷ் சாரின் பங்கு மிகப்பெரியது. சினிமாவில் அவர் உழைத்தது போல் யாரும் உழைத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு இரவு-பகலாக நடித்தவர்.
அவர், காமெடியன் மட்டுமல்ல. மிகப்பெரிய குணச்சித்ர நடிகர். அவருடைய இழப்பு, ஈடு செய்ய முடியாதது.
அவருடைய ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என்றார்.
கமல்ஹாசன் கூறுகையில், நாகேஷ் சாரை பற்றி சிரித்து பேசாத நாட்களே கிடையாது. இன்று அந்த நாள் இல்லை. தமிழ் திரையுலகுக்கும், மக்களுக்கும் அவர் செய்த சேவை, மகத்தானது. எல்லோரையும் சிரிக்க வைத்தார்.
எனக்கு அவர் மூத்தவர். நண்பர். தனிப்பட்ட முறையில், எனக்கு மிகப்பெரிய இழப்பு. நாகேசை, இந்தி நடிகர் மெகமூத் குருவாக நினைத்து, காலில் விழுந்து வணங்கியதை நான் பார்த்து இருக்கிறேன்.
எனக்கும் அவர் குருதான். கலைவாணருக்குப்பின், தமிழ் திரையுலகில் இருந்த மிகப்பெரிய நகைச்சுவை கலைஞர், நாகேஷ்.
இப்போது அவர் படுத்திருப்பது போன்ற வேடத்தில் கூட, என் படத்தில் நடித்து இருக்கிறார். சிவாஜியிடம் கற்றுக்கொண்டது போல் நாகேசிடமும் நான் நடிப்பை கற்றுக்கொண்டேன் என்று கண் கலங்கியபடி கமல் கூறினார்.
நகைச்சுவை நடிகரும், எழுத்தாளருமான சோ கூறியதாவதுஎம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு பெரும் நடிகர்கள், நாகேசின் வருகைக்காக காத்திருப்பார்கள். ஒரு படத்தில் நாகேஷ் 2 மணி நேரம்தான் நடிப்பார். அந்த அளவுக்கு அவர், பிஸியாக இருந்தார். நகைச்சுவை நடிப்புக்கு இலக்கணம், நாகேஷ்தான் என்றார்.
நாகேசுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர், மனோரமா. நாகேஷ் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், மனோரமா கதறி அழுதார். அவர் கண்ணீர்விட்டு அழுதபடி, நாகேஷ் வீட்டுக்கு வந்தார். நாகேஷ் உடலைப் பார்த்து தேம்பி தேம்பி அழுதார்.
அவருக்கு, கமலஹாசன் ஆறுதல் கூறினார்.
மனோரமா கூறுகையில், நாகேசுக்கு இணை, நாகேஷ்தான். அவர் மாதிரி நடிக்க இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்.
அவருடன் சர்வர் சுந்தரம், அனுபவி ராஜா அனுபவி உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறேன். அவருடைய மறைவு, தமிழ் பட உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் கூறுகையில், எல்லோரையும் சிரிக்க வைத்த மாபெரும் நடிகர், நாகேஷ். இன்று எல்லோரையும் அழ வைத்துவிட்டு போய்விட்டார்.
எதிர்நீச்சல் படத்தில் நடித்த மாடிப்படி மாதுவும், திருவிளையாடல் படத்தில் நடித்த தர்மியும், தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்த வைத்தியும் நாம் என்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.
நாகேசின் மறைவு, கலையுலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றார்.
நடிகர் சூர்யா கூறுகையில், இன்று தமிழக சினிமாவுக்கு ஒரு துக்க நாளாகும். எங்கள் குடும்ப இனிய நண்பர் அவர். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றார்.
கவிஞர் வைரமுத்து கூறுகையில், நாகேஷ் இறந்துபோகவில்லை. தமிழ் சினிமாவின் சிரிப்பு தான் இறந்து போய்விட்டது என்று குறிப்பிட்டார்.
நாகேஷை வைரமாக பட்டை தீட்டிய இயக்குநர் கே.பாலச்சந்தர் கூறுகையில், நாகேஷ் ஒரு சகாப்தம். அவருடைய இழப்பு தமிழக சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும். மேடை நாடகம் முதல் நான் அவருடன் இருந்ததை மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.
நான் அவர் மூலம் சிந்தித்தேன். அவர் என் வழியில் நடித்தார். எனக்கு பத்மஸ்ரீ விருது' கொடுத்ததுபோல், அவருக்கு கடைசிவரை கொடுக்காதது எனக்கு மிகப்பெரிய வருத்தமாகும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications