திருச்சியில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் வரும் மே 18 முதல் 23ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெறுகிறது என்று ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் சஞ்சீவ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்திய ராணுவத்தின் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுக்களுக்கான ஹவில்தார் கல்விப் பணி, இளநிலை அதிகாரி (சமையல் கலை), பொறியியல் துறையில் சர்வேயர் பணி ஆகியவற்றுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான முகாம் மே 18 முதல் 23ம் தேதி வரை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சியில் உள்ள ராணுவ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
ராணுவத்தில் சேர விரும்புவர்களின் விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதிக்குள் திருச்சி ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications