லண்டனில் ஏலத்திற்கு வரும் காந்தி, நேரு கடிதங்கள், காதி உடை, தபால் கார்டுகள்
லண்டன்: மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் எழுதிய கடிதங்கள், காந்தி தனது கையால் நூற்ற பருத்தி ஆடை உள்ளிட்ட பல அரிய பொருட்கள் லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் ஜூலை 14ம் தேதி ஏலத்திற்கு வரவுள்ளன.
கிலாபத் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், இஸ்லாமிய அறிஞருமான மெளலானா அப்துல் பாரிக்கு, காந்தி தனது கைப்பட உருதில் எழுதிய மூன்று கடிதங்களுக்கு ரூ. 1.99 முதல் ரூ. 2.38 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்து, முஸ்லீம் உறவு குறித்தும், லக்னோவில் நடைபெற்ற மதக் கலவரம் குறித்தும், தங்களது தனிப்பட்ட நட்பு குறித்தும் அதில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
ஒரு கடிதத்தை காந்தி சிறையிலிருந்து அனுப்பியுள்ளார். மேலும், உடை தயாரிப்பதற்காக தனக்கு பருத்தித் துணியை அனுப்பியதற்கும் இக்கடிதங்களில் நன்றி தெரிவித்துள்ளார் காந்தி.
அதேபோல காந்தியடிகள் தனது கையால் நூற்ற காதி உடை, அதில் அவரது கையெழுத்து இடம் பெற்றுள்ளது. இதுவும் ஏலத்திற்கு வருகிறது. இதற்கு ரூ. 1.59 லட்சம் முதல் ரூ. 1.99 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த உடையை, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நடிகை மோய்ரா லிஸ்டருக்கு காந்தியடிகள் பரிசாக அளித்துள்ளார். மோய்ரா, ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவியின் தோழி ஆவார்.
இதுதவிர உருதுக் கவிஞர் ஹமீத் உல்லா அப்சருக்கு உருதில் காந்தியடிகள் கையெழுத்திட்ட இரண்டு தபால் அட்டைகள் ரூ. 1.19 முதல் ரூ. 1.59 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நேரு, தனக்கு வேண்டிய மிருதுளா சாராபாய்க்கு எழுதிய கடிதங்கள் உட்பட, 29 கடிதங்கள் ஏலம் விடப்பட உள்ளன.
காஷ்மீர் விவகாரம், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது, டெல்லியில் வீடு இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்டவை குறித்து சாராபாய்க்கு நேரு கடிதம் எழுதியுள்ளார்.
1953ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி, காஷ்மீரில் ஷேக் அப்துல்லா ஆட்சியை டிஸ்மிஸ் செய்த பின், நேரு எழுதிய உணர்ச்சிகரமான கடிதமும் ஏல சுத்தியலுக்கு கீழ் வந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications