தமிழக போலீசார் 13 பேர் உட்பட 26 பேருக்கு ஜனாதிபதி விருது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீரதீர செயல்கள் புரிந்து, சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக காவல் துறையை சேர்ந்த 13 பேர் உள்பட 26 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்து, நாட்டு மக்களுக்கு சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு ஜனாதிபதி விருதுகளை அறிவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஜனாபதி விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில் தமிழக காவல் துறையை சேர்ந்த 13 பேர் உட்பட 26 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் விபரம்:

காவல்துறையினர்...

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த போது சிறப்பாக பணியாற்றியதற்காக தற்போதைய சென்னை போலீஸ் கமிஷ்னர் டி.ராஜேந்திரன் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இவருடன் கோவை சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், சென்னை பிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் டி.சந்திரபாசு, சென்னை கூடுதல் எஸ்பி கருணாநிதி, சென்னை சிபிசிஐடி துணை சூப்பிரண்டு பாலு, சென்னை புறநகர் உதவி கமிஷனர் டி.அசோக் ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது.

இவர்களை தவிர்த்து இன்ஸ்பெக்டர்கள், எஸ்.கண்ணன்(திருச்சி டவுன்), ராஜேந்திரன்(தர்மபுரி), பி.கோவிந்தசாமி (திருச்சி), கண்ணன் (நாகர்கோவில்), வெங்கடேசன் (கடலூர் லஞ்ச ஒழிப்பு), சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு விசாரணை மையத்தின் இன்ஸ்பெக்டர் பரமசாமி, ராமநாதபுரம் ஆயுதப்படை எஸ்ஐ தனசேகரன் ஆகியோர் இந்த விருதை பெறுகிறார்கள்.

சிபிஐ, சிஆர்பிஎப் சேர்ந்த 10 பேருக்கு...

சென்னை லஞ்ச ஒழிப்பு சிபிஐ இன்ஸ்பெக்டர்கள் கலைமணி கோபாலன், குமரேசன் கிருஷ்ணசாமி, கோவை மத்திய ரிசர்வ் போலீஸ் படை எஸ்ஐ ஹர்ஜிராம், சென்னை ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரி கமலபதி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சென்னை உதவி இயக்குனர் டி.மனோகரன், சென்னை ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி பாதுகாப்பு கமிஷனர் டி.டேனியல் ஜோசன் தாஸ், நெய்வேலி மத்திய தொழில்பாதுகாப்பு படை சீனியர் கமாண்டன்ட் சையது ஜபாருல்லா, சென்னை ஐசிஎப் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்ஐ ஹரிலால் ஆகியோரும் சிறந்த பணிக்கான ஜனாதிபதி விருதுகளை பெறுகிறார்கள்.

சிறை துறையில் 3 பேருக்கு...

சிறை துறையில் சிறப்பாக செயல்பட்ட சென்னை சரக சிறைச்சாலைகள் டிஐஜி ஆர்.துரைசாமி, கோயம்புத்தூர் சிறைச்சாலை கூடுதல் சூப்பிரண்டு பி.கோவிந்தராஜன், கொக்கிரக்குளம் பெண்கள் சிறப்பு சப்-ஜெயில் தலைமை வார்டர் ஐ.சுப்புலட்சுமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருவருக்கு...

புதுச்சேரியில் இரண்டு போலீசாருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு எஸ்.ராமராஜு, சிக்மா செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் ராஜ கிருபாகரன் ஆகியோரும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+