நெல்லையப்பர் கோவிலில் மகாருத்ர வேள்வி துவக்கம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையப்பர் கோவிலில் உலக நன்மைக்காக மகா ருத்ர வேள்வி இன்று துவங்கியது.

நெல்லையப்பர் கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு உலக நன்மை வேண்டி கோடி அர்ச்சனை கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சுவாமி நெல்லையப்பருக்கு அதிருத்ர மகா வேள்வி இன்று (12ம் தேதி) தொடங்கியது. வரும் 23ம் தேதி இந்த வேள்வி நிறைவடைகிறது.

அதிருத்ர மகா வேள்வியை முன்னிட்டு பாபநாசம் பொதிகை மலையில் இருந்து வேத விற்பன்னர்கள் மற்றும் பக்தர்கள் மூலம் எடுத்து வரப்பட்ட

புனித நீர் கலசம் சுவாமி சன்னதி தெப்பங்குளம அருகே உள்ள அங்குச விநாயகர் கோவிலில் இருந்து யானை காந்திமதி மீது ஊர்வலமாக

எடுத்து வரப்பட்டு ரதவீதிகளை சுற்றி கோயிலை அடைந்தது.இதில் பக்தர்கள் பேரவை காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் உபய திருப்பதி மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் புனித நீர் நிரப்பப்பட்ட கலசம் அதிருத்ர மகா வேள்வியில் வைக்கப்பட்டது. இன்று காலையில் வேள்வி துவங்கியது.

வரும் 23ம் தேதி காலையில் நெல்லையப்பருக்கு 1008 கலச அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருகல்யாணம் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் தங்க சப்பரத்தில் உலா வரும் வைபவம் நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+