சென்னையில் கின்னஸ் சாதனைக்காக 12 மணிநேர புராண நாடக நிகழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கின்னஸ் சாதனைக்காக நாட்டுப்புற நாடக கலைஞர்களின் 12 மணிநேர புராண நாடக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபா அரங்கில், கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து 12 மணிநேரம் நாட்டுப்புற நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் துவக்கி வைத்தார்.

விழுப்புரத்தை சேர்ந்த அருட்பெருஞ்சோதி, அகரத்திருமேடு மக்கள் கலை கழகம், அங்காள பரமேஸ்வரி, நவசக்தி, வள்ளலார் ஆகிய மேடை நாடக கலை குழுக்களை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட கலைஞர்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நாடகங்களை நடத்தி காட்டினர்.

இதில் நரகாசுர வதம்- ஸ்ரீகிருஷ்ண பாமா விஜயம், ஸ்ரீமுருகன் திருவிளையாடல்- சூரசம்ஹாரம், குமாரவிஜயம் உள்ளிட்ட புராண கதைகளை விளக்கும் நாடகங்களை நாடக கலைஞர்கள் தத்துவரூபமாக நடித்து காட்டினர். முன்னாள் முதல்வர் காமராஜர் அமைச்சரவையி்ல் இருந்த பூவா ராகவன், வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை தேவயானி, கவிஞர் காசி முத்துமாணிக்கம், ஜோதிடர் காழியூர் நாராயணன், இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+