பசுமை வீடுகள் திட்டம்-20ம் தேதி காஞ்சியில் தொடங்கி வைக்கிறார் ஜெ.
சென்னை: காஞ்சிபுரத்தில் புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகளை வரும் 20-ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைக்கிறார். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் சூரிய ஒளி மின்சார வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட ரூ.1080 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது.
பூகம்பத்தால் பாதிக்கப்படாது
இந்த வீடுகளுக்கு அடித்தளத்தில் மட்டும் சிமெண்ட், செங்கற்கள் பயன்படுத்தப்படும். பக்கவாட்டு சுவர்கள் பைபர் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. இந்த சுவர் எடை குறைந்தது என்பதால் சூறாவளி மற்றும் நில நடுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டாலும் அதில் வசிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
30 டிகிரி சென்டிகிரேட் முதல் 80 டிகிரி சென்டி கிரேட் வரை இந்த வீடு வெப்பத்தை தாங்கும். தெர்மோகோலில் உள்ளது போன்ற பொருட்கள் இந்த பைபரில் சேர்க்கப்பட்டுள்ளதால் வெப்பம், குளிர் போன்ற பல்வேறு சூழ்நிலைகளையும் தாங்க கூடியதாக இருக்கும்.
ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பம்
சோதனை முறையில் இந்த வீடுகளை காஞ்சீபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் கட்டி உள்ளனர். ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடுகளில் ஒரு ஹால் மற்றும் சமையலறை, கழிவறை வசதி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் சோலார் அமைப்புகளும் பொறுத்தப்பட்டுள்ளது.
7 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடியேறுவதற்கு தயார் நிலையில் உள்ளதால் வரும் 20 ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா இதனை தொடக்கிவைக்கிறார். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications