18ம் தேதி சூரசம்ஹாரம்: நெல்லை- திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்
நெல்லை: கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வரும் 18ம் தேதி நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வரும் 18ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் ரயில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு 1.45க்கு திருச்செந்தூரை அடையும். இரண்டாவது ரயில் மதியம் 1.30 மணி்க்கு புறப்பட்டு 3.45க்கு திருச்செந்தூரை அடையும். இந்த இரண்டு ரயில்களும் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சானவிளை,குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மூன்றாவது ரயில் நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு 12.45 மணிக்கு திருச்செந்தூரை அடையும். இந்த ரயில் வழியில் எந்த ரயில் நிலையத்திலும் நிற்காது. இதேபோன்று திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் ரயில் காலை 9.15 மணி்க்கு புறப்படுகிறது. இந்த ரயில் காலை 10.50 மணிக்கு நெல்லையை வந்தடையும். இரண்டாவது ரயில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு 8.45
மணிக்கு நெல்லையை வந்தடையும். இந்த ரயில்கள் வழியில் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு ரயில்வே அதிகாரி வேணுகோபால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications