அமீரக தமிழ் மன்றத்தின் மகளிர் தின விழா கொண்டாட்டம்
துபாய்: அமீரக தமிழ் மன்றத்தின் மகளிர் தின விழா கொண்டாட்டம் வரும் மே மாதம் 4 ம் தேதி நடக்கிறது.
அமீரக தமிழ் மன்றம் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை வரும் மே மாதம் 4ம் தேதி நடத்துகிறது. இதில் 3 முதல் 9 வயது வரையுள்ள பெண் குழந்தைகளுக்கான பேஷன் ஷோ நடத்தப்படுகிறது.
பெண்களுக்காக 'சுவை அரசி 2012' என்ற பெயரில் சமையல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை நடக்கிறது. இது தவிர 'பெண்ணியம் எனது பார்வையில்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. கட்டுரையை வீட்டில் இருந்து எழுதி அனுப்பலாம்.
மேலும் தேவையற்றவை என்று தூக்கியெறியும் பொருட்களை வைத்து கைவினைப் பொருட்கள் செய்யும் போட்டி ஏப்ரல் 13ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது. உங்கள் குழந்தைக்கு நடனமாடத் தெரியும் என்றால் அவர்களை நிகழ்ச்சி மேடையில் ஆட வைக்க விருப்பமுள்ள பெற்றோர் 050 7175439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் ஏப்ரல் 6ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். போட்டிகளில் உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் [email protected] என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம் அல்லது 055 3896973, 050 3445375 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications