கோலம், மெஹந்தி, சமையல் போட்டி: கலை கட்டிய துபாய் தமிழ்ச் சங்க மகளிர் தின விழா
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் மகளிர் தின விழா கடந்த 22ம் தேதி ஷார்ஜாவில் உள்ள ரயன் ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடந்தது.
துபாய் தமிழ்ச் சங்கத்தில் மகளிர் தின விழா 22.03.2013 அன்று மாலை ஷார்ஜா ரயன் ஸ்டார் சர்வதேச பள்ளியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
துவக்கமாக அமீரக தேசிய கீதம், இந்திய தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியன பாடப்பட்டது. கோபிகா மற்றும் ஓவியா ஆகியோர் திருக்குறள் வாசித்தனர். ஹரினி உமா மகேஷ் இன்று ஒரு தகவல் தந்தார்.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆண்கள் அடங்குவது அன்பிலா? அதிகாரத்திலா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. அன்பிலே எனும் அணியில் ரேணுகா சர்மா, லட்சுமி சுந்தர்ராமனும், அதிகாரத்திலே எனும் அணியில் சந்திரா கீதாகிருஷ்ணன் மற்றும் புவனா ரமேஷ் ஆகியோரும் தங்களது தரப்பு வாதங்களை உணர்வுப்பூர்வமாக வைத்தனர்.
சந்திரா கீதாகிருஷ்ணன், ரேணுகா சர்மா, சஞ்சனா, குஷித், ப்ரியங்கா, குஷ்மித் ஆகியோர் பாடல் பாடினர். சந்திரா பெண்கள் தினத்தையொட்டி நிகழ்ச்சி முழுக்க பெண்களால் நடத்தப்பட்டது.

சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டுதல் போட்டி
சிறுவர், சிறுமியருக்காக வண்ணம் தீட்டுதல், படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் சிறுவர், சிறுமியர் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலானவர்களுக்கு நடைபெற்ற வண்ணம் தீட்டுதல் போட்டியில் ஸ்ரியா, சிவகன்யா, ப்ரசிதா ஆகியோரும், ஒன்பது முதல் 12 வயது வரையிலானவர்களுக்கு நடைபெற்ற படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டியில் நேகா, ப்ரியங்கா, வசுந்த்ரா ஆகியோரும் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளைப் பெற்றனர்.

பெண்களுக்கான சமையல் போட்டி
பெண்களுக்கான சமையல் போட்டி நடத்தப்பட்டது. இதில் சைவப் பிரிவில் ப்ரியா பாலாஜி முதல் பரிசைப் பெற்றார். அசைவத்தில் காமாட்சி ராஜேந்திரன் மற்றும் ரேணுகா பரிமேழலகன் ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைப் பெற்றனர்.

மருதாணி இடும் போட்டி
பெண்களுக்கு மருதாணி என்றால் கொள்ளைப் பிரியம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் பெண்களுக்காக மருதாணி இடும் போட்டி நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டு பல பல டிசைன்களில் மருதாணி இட்டனர். இதில் கீதா கதிர்வேல் முதல் பரிசையும், ப்ரியா பாலாஜி இரண்டாவது பரிசையும் பெற்றனர்.

கோலப்போட்டி
பெண்களுக்காக சமையல், மருதாணி தவிர்த்து கோலப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் லட்சுமி சுந்தரராமன் முதல் பரிசையும், அருணா உமா மகேஷ் இரண்டாவது பரிசையும் பெற்றனர்.












Click it and Unblock the Notifications