நேஷ்வில் தமிழ்ச் சங்கத்தின் மகளிர் பிரிவு நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
நேஷ்வில்(யு.எஸ்): டென்னசி தமிழ்ச் சங்கத்தின் மகளிர் பிரிவினர், மார்பக புற்று நோய் விழிப்புணர்வு முகாம் நடத்துகிறார்கள். மார்ச் 13, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் நோலன்ஸ்வில் ஹிஸ்டாரிக்கல் சொசைட்டி (Nolensville Historical Society) வளாகத்தில் நடைபெற உள்ளது.
காலை உணவுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. Mathew Walker Comprehensive Health Center ல் மார்பக புற்றுநோய் கல்வியாளராக பணியாற்றும் மார்லின் ஆடம்ஸ், நோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விவரங்களை எடுத்துரைக்கிறார்.

வேண்டர்பில்ட் இன்க்ராம் சென்டர் இணை பேராசிரியர் டாக்டர் நிஷிதா ரெட்டி, மார்பக புற்றுநோய் பற்றி கூடுதல் தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உரையாற்றுகிறார்.
தொடர்ந்து நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் அனுபவங்களை டாக்டர் கல்பனா போச்சம்பள்ளி மற்றும் கவிதா சரவணன் விவரிக்க உள்ளார்கள்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் சுமார் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக Breast Cancer Research Foundation தெரிவித்துள்ளது.
வருமுன் காப்போம் என்ற நோக்குடன் டென்னசி தமிழ்ச் சங்கத்தின் மகளிர் பிரிவினர் நடத்தும் இந்த விழிப்புணர்வு முகாம் அமெரிக்க தமிழ்ச் சமூகத்தில் முன் மாதிரியாக விளங்குகிறது.
அனைவரும் பங்கேற்று தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டென்னசி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications