மதம் பிடித்தவர்களுக்கு...!
நதிக்கரை தோன்றி, சமவெளி நோக்கி
மனிதம் பாய்ந்த காலம் முதலாக
நடந்து கொண்டுதானிருக்கிறது இந்த
மதம் பிடித்த மனித விளையாட்டு
மதத்திற்குள் புகுந்து ஞானத்தை
தேடிக் கொண்டே இருங்கள்
பூமியின் வெளிக்கு அப்பால்
கிழக்கு மேற்கு தேடுவது போல
சமயங்களும் சம்பிரதாயங்களும்
ஒட்டிக் கொண்டு விட்டன சமூகத்துடன்
உடம்போடு ஒட்டிக் கொண்ட
வியாதியைப் போலவே
எங்கோ ஓர் மனிதனின் விசித்திர
கற்பனையில் பிரசவித்த கடவுள் கையில்
சகல உயிர்களும் சர்வ பத்திரமாய்
சுய ஒழுக்கம் .. அப்படீன்னா?
தொழில் தர்மம் .. தேவையே இல்லை
பிழைக்கத் தெரிந்திருந்தால் போதுமானது!
புண்ணியம் போதவில்லையென்றால் ..
இருக்கவே செய்கிறது கோயில் உண்டியல்.
தரிசனமென்பது தனிமனித சாத்தியமே அன்றி
கோஷமிட்டு அலையும் கூட்டத்திற்கு அல்ல,
அது காவி அணிந்திருப்பினும் சரி
கருப்பு அணிந்திருப்பினும் சரி.
மனித அபத்தங்களுக்குத் தீர்வான
ஞானச்சரக்கு எந்தக் கடையிலும்( மத அமைப்பிலும்)
மொத்த விலைக்கு இல்லவே இல்லை.
சமைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கானதை
நீங்களாகவே ..
விடியும் வரைக்குமென்றாலும் விழித்தே இருங்கள்
விடுதலைக்கான கீறல் விண்ணில் தெரியும் வரை ..
இல்லையேல் ..?
பச்சையோ,வெள்ளையோ
காவியோ, கருப்போ - உடுத்திக் கொண்டு
கிளம்பலாம் வாருங்கள் - நமக்குப் பிடித்த மதத்தை
பிறர்க்கும் பிடிக்கச் செய்ய ...
- அனந்த்([email protected]) இவரது முந்தைய படைப்பு:
1. புரிந்தால் சொல்லுங்களேன்...
2. அயல் தேசத்து அடையாளங்களாய்...
3. க(டல்)ண் நீர்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications