For Daily Alerts
Just In
எனக்கென்ன
எனக்கென்னவென்று இருப்பேன்
எதிர்படும் நேரம் எவரிடமும் சிரிப்பேன்
உள்ளில் உறங்கும் வலியதை
வெளிச்சப் படத்திலா வடிப்பேன்
ஒருவார்த்தை பேச உளமெலாம் துடிக்கும்
யாருமில்லா இடத்தினிலே என்ன தான் பேச்சென
ஒத்திட்ட எண்களில் தொலைப் பேசி ஏசும்
அதற்கென்ன தெரியும்... என் தவிப்பெதுவென
பலவாய் நினைந்து பலரிடம் பேசி
மெல்ல மெல்ல மறந்து போய்
என்றோ என் குரல் கேட்டிடும் நேரம்
அடடா எப்படி இருக்கிறாய் என்று
ஒலிக்கும் உன் குரல் கேட்டிடில் தானே
உள்ளில் சுரக்கும் ஆனந்த வெள்ளம்
கண்ணில் மெல்ல வெளிவரத் துவங்கும்
கண்களில் உன் முகம் நிழலெனத் தெரியும்
உள்ளுள் ஓருணர்வு மட்டும் ஓரமாய்
உய்வுப் பெறாத கவிதையாய்
நெருடிக் கொண்டு இருக்கும்
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]