எழுது ஒரு கடுதாசி
கிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்துஉரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும்போதும், பெருநகரத்துச் செயற்கை நாடகங்களால் உள்ளேசெத்துக்கிடக்கும் அத்தனை உணர்வுகளும் உயிர்பெற்று மீண்டும்
புலர்ந்துவிடுவது இன்றும் நம்மை நம் அடிப்படைப் பண்பு மாறாமல் பாதுகாத்து வருகின்ற வரம்.
இங்கே ஒரு கிராமத்து மகன், புகைப்படத்தையும் உறவினர்களின் பரிந்துரைகளையும் மட்டுமே முழுமனதுடன் ஏற்று, ஒரு வண்ண நிலவைவாழ்க்கைத்துணையாக்க நிச்சயம் செய்கிறான். உரையாடுவதோ கடிதம் வரைவதோ ஏற்றுக்கொள்ளப்படாத அந்த கிராமத்தில், பெருநகரவாழ்க்கையின் தூண்டுதலால், அவளிடம் கடித சுகம் கேட்டு அவன் எழுதும் கடிதமே இந்தக் கவிதை. அவர்களின் நாட்டுப்புற நடையிலேயே நடக்கிறது.
நேத்துவர எம்மனச நெலப்படுத்தி நானிருந்தேன் பாத்துவச்ச தாய் தம்பி பருசமுன்னு சொன்னாங்க வேத்துவழி தெரியாம பாழான எம்மனசு மாளாத கனவாச்சி வாடாத மருக்கொழுந்தே போடாட்டி எம்மனசு ஆடாத மனசோட வாடாத எம்மனசும் தாத்தா சொன்னாரா கூத்தாத் தெரியலியா யாருவந்து கேட்டாங்க நீரயள்ளி எறைச்சாக்கா தேர இழுத்தும் இப்போ நாளமெல்லப் போக்காத நாந்தான ஒங்கழுத்தில் நாந்தானே ஒனக்கூன்ன |