மண்ணில் கலந்த பிஞ்சுவிதைகளே
நிவீர் மாண்ட செய்தி காதில் பாய
தீயொன்று செவிக்குள் புகுந்தது
கடைசிக் கணத்தை எண்ணிப்பார்க்க
கண்கள் சொரிகிறது ஆறாகி
நாளைய விழுதுகள் என்று இருந்தோம்
இன்றே இவ்வுலகை விட்டுப்போனதென்ன?
பெற்றவர்கள் பதைத்து துடித்திருக்க
பாவிகள் எம்மைவிட்டு சென்றதென்ன?
பரந்த பூமியில் வாழ இடமில்லையென்றோ
விரைந்து நிவீர் விண்ணகம் சென்றீர்
பாவிகளாய் நாமிங்கு பரிதவித்துக் கிடக்க
தோழர்கள் கூடி நீங்கள் ஓடிமறைந்தீரே
ஆவி துடிக்குதிங்கே மேனி எரியுதிங்கே
பாதம் இரண்டும் தரைபடிய மறுக்குதிங்கே
காணும் காட்சியெல்லாம் மனக்கண்ணில்
மரணித்த மணித்துளியை எண்ணியிங்கே
காட்டித்தான் எம்மை இங்கே
கசக்கிப் பிழிகிறது
வாழும் நிமிடத்தில் எமக்கு நீவிர்
மரணத்தைக் காட்டி சென்றதென்ன?
வாழ்வின் சுமையை சுமக்குமுன்னே
சாவின் துணையைத் தேடினீரே
மண்ணில் விழுந்த பிஞ்சுவிதைகளே
மலர்வதற்காய் இருந்த மொட்டுகளே
காலனின் கண்களில் பட்டதினால்
தீயென்று கதை பேசி உங்களை
கருக்கிக் கசக்கி எடுத்துவிட்டான்
ஆற்ற மொழியேதும் ஏதும் இல்லை
ஆற்றுவார் தான் யாருமில்லை
சுற்றுலா போனதாய் எண்ணிக்கழிக்க
காலை நீர் போகும் காட்சிவந்து
ஈட்டியாய் நெஞ்சில் பாய்ந்து
வேதனையை தூண்டுதிங்கே
எம் இனிய செல்வங்கே
வாழ்ந்து முடித்து நீங்கள்
வையகம் விட்டு போனாலும்
எம் ஆவிபிரியும் மட்டும்
எம்மை விட்டு இந்நிகழ்வு
பச்சை மரத்து ஆணிபோல
பதிந்து தான் கிடக்கும் இங்கே
உங்கள் பிஞ்சுப் பாதங்களுக்கு
எங்கள் கண்ணீர் பூக்கள்......