உயிர்ச் சமாதி
சிணுங்கலாய் சிரித்து
தளும்பும் நீர் சுமந்து
உயிர்ப்பை தந்த
நம் தெருப் பெண்கள்- அவர்களால்
குளுமை வழிந்த நம் வாசல்கள்...
அந்தியில் அகல் ஏற்றிய பின்பே
அவர்களின்
ஈரக் கால் தடங்களும்- அவை
ஈனும் கொலுசொலிகளும் இன்றி
அமைதியாயின நம் முற்றங்கள்
வேர்க்க வேர்க்க ஓடி ஆடி
வேண்டும் மட்டும் அள்ளிப்பருகி
உயிர் நிரப்பிக் கொண்டோம்
விளையாட்டுப் பருவத்தில்...
வாசல் தொட்டியில்
நீர் நிரப்ப நிரப்ப
வழிபோக்கிக் கன்றுகள்
கழுத்து மணி அசைத்து
கருவிழி உருட்டி
மெதுவாய் பருகின
குட்டி ஆடுகளும்
குருவி காக்கைகளும்
குளித்தும் கும்மாளமிட்டன
இனிய நினைவுகள் தான்...- ஆனால்...
இப்போது இறந்த காலத்தில்
வரலாறாய் மாறி
வறண்டுதான் போனாள்...- அதற்காக...
குப்பையிட்டு மூடி
குழைத்து சிமெண்ட் பூசி
கூடுதலாய் ஓர் அறையா?
இன்றில்லை என்றாலும்
என்றேனும் ஓர் நாளில்...
ஊற்றுக் கண் திறப்பாளே...
கோமாவில் இருந்தாலும்
அம்மா அம்மாதானேடா...
உயிர்ச் சமாதி செய்வாயோ?
-பத்ம ப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications