புறம்- ஷைலஜா
புறங்காட்டும் அகமே
அதற்குப் புறம் வாங்கிக் கொண்ட
ஒளியைக் கூட்டிக் காட்டும்
திருத்த வைக்கும்
உள்ளதை உள்ளபடி
உறுத்தாமல் கூறும்
ஆடி அசைந்தாலும்
அப்படியே பிரதிபலித்து
தான் நிலைத்து நிற்கும்
உடைத்துச் சிதறினாலும்
ஒவ்வொரு சில்லும்
உருவத்தைத் தாங்கி வரும்
கண்ணாடி இல்லா வீடு உண்டா?
அகம்தான் மனமெனில்
முகம் ஒரு கண்ணாடி
கண்ணாடி இல்லா உலகில்
கண்டு கொள்ள முடியுமா
புறத்தை?
- ஷைலஜா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. பகல் பொழுது
2. விலகியே இரு
3. ப்ளாஸ்டிக் மனசு
4. சொல்லாமல் கொள்ளாமல்..
5. புரிந்துகொள்
6. சொல்லி இருக்கலாம்
7. எது?
8. ஆறும் நூறும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.