கருணைத் தாய்- நெல்லை சுதன்
( அருளாளர் பட்டம் அறிவிக்கப்பட்ட இத்தருணத்தில்அன்பு தெய்வம் அன்னை தெரசாவிற்கு எனது இதய அஞ்சலி )
கருணை பொழிந்த மேகமின்று
கலைந்து சென்றதம்மா
கருத்தில் ஒளிர்ந்த தீபமொன்று
கண் மறைந்ததம்மா
காலம் கடமையைச் செய்திடினும்- - என்
கண்ணீர் சமாதானம் அடைவதில்லை
இயற்கை உனை வென்றிடினும்- - என்
இதயம் உனை இழப்பதில்லை
வாக்குறுதிகளை வாரியிறைத்து
வாக்குச் சீட்டுக்களைப்
பெறுதற்கு மட்டுமே
ஐந்தாண்டுகளுக் கொருமுறை
ஏழ்மையும் ஏழைகளும்
எங்கள் அரசியல்வாதிகளின்
நாவினிலே நர்த்தனமாடுகிறபோது
ஐரோப்பாவின் அல்பேனியாவில்
அவதரித்த உன்னை
இந்தியாவின் ஏழைக் குழந்தைகள்
ஈர்த்ததெப்படி? தாயே !
சாதி மதம் மொழியென்று
இரத்த இரணங்கள் மட்டுமே
சரித்திரச் சான்றுகளாய்
சார்ந்த பூமியில்
அன்புவிழி அன்புவழி
அன்புமொழி அன்புமதம்
அத்தனையும் அன்புமயம் !
வார்த்தையில் மட்டுமின்றி
வாழ்ந்தும் காட்டிய
வாழ்வின் அர்த்தமே, அவதாரமே
வணங்குகிறேன் அம்மா -- உன்
ஆன்மாவிற்கு என்றென்றும்
அடிமை நானம்மா !
மதங்களும் மார்க்கங்களும்
மலர்ந்தது ஒன்றுதானே
மனித நேயமெனும் மலர்கள்தானே
மலர்களைச் சிதைத்து நின்று
மரங்களைப் பாதுகாக்க
மண்ணின் மைந்தரிடை
மடமையின் மல்யுத்தம்
பிறிதொரு மண்ணில் பிறந்தாலும். . . .
புவியும் புவிவாழ் மாந்தர்களும்
ஒன்றுதானே !
புரிய வைத்தாய்
புவியியல் ஆராய்ச்சியால் அல்ல -- உன்
புண்ணியச் சேவையால்
ஐயிரண்டு திங்கள்
அடிவயிற்றில் சுமந்த
பெற்றவளும் பிள்ளையுமே
பிரிந்தொழுகும் வாய்ப்புண்டு
பேதைமையால்
திரை நடுவே விழுவதுண்டு
ஆனால்
அன்னையே என்று
உன்னை அழைத்த போதுதான்
என் அங்கத்தின் உயிரணுக்களெல்லாம்
இன்ப பிரளயத்தில்
ஏகோபித்துப் பாடின !
நாடி நாளங்களெல்லாம்
களிநடம் புரிந்தன !
இன்றோ. . .
கருணைத் தாயே !
உன் காலடியில்
என் கண்ணீர்ப் பூக்கள்
சென்ற இடமெல்லாம்
சிறப்பு உனக்குண்டு
பட்டம் பாராட்டுக்கள்
பெற்று மகிழ்ந்ததெலாம் எனக்கன்று !
ஏழை இனத்திற்கென்று - நீ
பகர்ந்ததெலாம் பகிர்ந்ததெலாம்
நாடறியும் இந்நானிலமறியும்
மெழுகுவர்த்திக்கு
ஏன் மேலாடை ?
எதிர்பார்த்து வந்ததல்ல
உன் பாதை !
உளம் இரங்கிச் செய்ததன்றோ
உன் சேவை !
புண்களும் புழுக்களும்
உழுது கொண்டிருந்த
உயிர்க் கூட்டினை - உன்
பூக்கரங்களில் ஏந்தி
அன்பெனும் புனுகு தடவி
அகம் மகிழ்ந்தாயே
அதற்கே
ஆயிரம் கோடிபெறும்
அம்மா !
ஆயிரம் கோடிபெறும் !
மோட்ச வாசலிலே - உனக்கு
சிவப்புக் கம்பள வரவேற்பாம்
சின்னக் குழந்தைகளும்
கண்ணீரோடு கலந்துரையாடினர்
உன் அன்பையே
சுவாசித்த எமக்கு-உன்
மூச்சு நின்று போனதால்
சுவாசம் தடைபடுகிறது தாயே !
இறுதியாக
உன்னிடம் ஓர் யாசகம். . . .
இன்னும் ஓர் தெரசா
எங்களுக்கு வேண்டும்
ஆம் !
அன்னை என்ற சொல்லுக்கு
அர்த்தம் கற்பித்த - அந்த
இன்னும் ஓர் தெரசா
எங்களுக்கு வேண்டும்
மனிதனும் தெய்வமாகலாம்
மார்க்கம் சரியென்றால் !
மனங்களை வென்ற மாதாவே
என் கண்களுக்குத் தெரிந்த
கடவுள் நீ !
எனவே
என் இதயக் கருவூலத்தில்
என்றென்றும் நீ !
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications