கருணைத் தாய்- நெல்லை சுதன்
( அருளாளர் பட்டம் அறிவிக்கப்பட்ட இத்தருணத்தில்அன்பு தெய்வம் அன்னை தெரசாவிற்கு எனது இதய அஞ்சலி )
கருணை பொழிந்த மேகமின்று
கலைந்து சென்றதம்மா
கருத்தில் ஒளிர்ந்த தீபமொன்று
கண் மறைந்ததம்மா
காலம் கடமையைச் செய்திடினும்- - என்
கண்ணீர் சமாதானம் அடைவதில்லை
இயற்கை உனை வென்றிடினும்- - என்
இதயம் உனை இழப்பதில்லை
வாக்குறுதிகளை வாரியிறைத்து
வாக்குச் சீட்டுக்களைப்
பெறுதற்கு மட்டுமே
ஐந்தாண்டுகளுக் கொருமுறை
ஏழ்மையும் ஏழைகளும்
எங்கள் அரசியல்வாதிகளின்
நாவினிலே நர்த்தனமாடுகிறபோது
ஐரோப்பாவின் அல்பேனியாவில்
அவதரித்த உன்னை
இந்தியாவின் ஏழைக் குழந்தைகள்
ஈர்த்ததெப்படி? தாயே !
சாதி மதம் மொழியென்று
இரத்த இரணங்கள் மட்டுமே
சரித்திரச் சான்றுகளாய்
சார்ந்த பூமியில்
அன்புவிழி அன்புவழி
அன்புமொழி அன்புமதம்
அத்தனையும் அன்புமயம் !
வார்த்தையில் மட்டுமின்றி
வாழ்ந்தும் காட்டிய
வாழ்வின் அர்த்தமே, அவதாரமே
வணங்குகிறேன் அம்மா -- உன்
ஆன்மாவிற்கு என்றென்றும்
அடிமை நானம்மா !
மதங்களும் மார்க்கங்களும்
மலர்ந்தது ஒன்றுதானே
மனித நேயமெனும் மலர்கள்தானே
மலர்களைச் சிதைத்து நின்று
மரங்களைப் பாதுகாக்க
மண்ணின் மைந்தரிடை
மடமையின் மல்யுத்தம்
பிறிதொரு மண்ணில் பிறந்தாலும். . . .
புவியும் புவிவாழ் மாந்தர்களும்
ஒன்றுதானே !
புரிய வைத்தாய்
புவியியல் ஆராய்ச்சியால் அல்ல -- உன்
புண்ணியச் சேவையால்
ஐயிரண்டு திங்கள்
அடிவயிற்றில் சுமந்த
பெற்றவளும் பிள்ளையுமே
பிரிந்தொழுகும் வாய்ப்புண்டு
பேதைமையால்
திரை நடுவே விழுவதுண்டு
ஆனால்
அன்னையே என்று
உன்னை அழைத்த போதுதான்
என் அங்கத்தின் உயிரணுக்களெல்லாம்
இன்ப பிரளயத்தில்
ஏகோபித்துப் பாடின !
நாடி நாளங்களெல்லாம்
களிநடம் புரிந்தன !
இன்றோ. . .
கருணைத் தாயே !
உன் காலடியில்
என் கண்ணீர்ப் பூக்கள்
சென்ற இடமெல்லாம்
சிறப்பு உனக்குண்டு
பட்டம் பாராட்டுக்கள்
பெற்று மகிழ்ந்ததெலாம் எனக்கன்று !
ஏழை இனத்திற்கென்று - நீ
பகர்ந்ததெலாம் பகிர்ந்ததெலாம்
நாடறியும் இந்நானிலமறியும்
மெழுகுவர்த்திக்கு
ஏன் மேலாடை ?
எதிர்பார்த்து வந்ததல்ல
உன் பாதை !
உளம் இரங்கிச் செய்ததன்றோ
உன் சேவை !
புண்களும் புழுக்களும்
உழுது கொண்டிருந்த
உயிர்க் கூட்டினை - உன்
பூக்கரங்களில் ஏந்தி
அன்பெனும் புனுகு தடவி
அகம் மகிழ்ந்தாயே
அதற்கே
ஆயிரம் கோடிபெறும்
அம்மா !
ஆயிரம் கோடிபெறும் !
மோட்ச வாசலிலே - உனக்கு
சிவப்புக் கம்பள வரவேற்பாம்
சின்னக் குழந்தைகளும்
கண்ணீரோடு கலந்துரையாடினர்
உன் அன்பையே
சுவாசித்த எமக்கு-உன்
மூச்சு நின்று போனதால்
சுவாசம் தடைபடுகிறது தாயே !
இறுதியாக
உன்னிடம் ஓர் யாசகம். . . .
இன்னும் ஓர் தெரசா
எங்களுக்கு வேண்டும்
ஆம் !
அன்னை என்ற சொல்லுக்கு
அர்த்தம் கற்பித்த - அந்த
இன்னும் ஓர் தெரசா
எங்களுக்கு வேண்டும்
மனிதனும் தெய்வமாகலாம்
மார்க்கம் சரியென்றால் !
மனங்களை வென்ற மாதாவே
என் கண்களுக்குத் தெரிந்த
கடவுள் நீ !
எனவே
என் இதயக் கருவூலத்தில்
என்றென்றும் நீ !
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications