பவுர்ணமி நிலவும் பன்னீர் பூக்களும்…..
Subscribe to Oneindia Tamil

உன் முகத்தை கண்டால்
நிலவின் பிரகாசம்….
உன்னைக் காணும் தினமெல்லாம்
எனக்கு பவுர்ணமிதான்…
உன் கண்கள் கூறும்
ஆயிரம் காதல் கதைகள்….
அதனால்தான் இமைக்க மறந்து
ரசிக்கின்றேன்….
உன் புன்னகை சிந்தும்
வைரத்தின் ஒளிச்சிதறல்
அதை நான் சேகரித்து
அணிகலனாய் ஆக்கிக் கொண்டேன்…
உன் ஒவ்வொரு பேச்சும்
ஒரு கவிதைப் புத்தகம்….
அதற்குப் பரிசாகத் தரலாம்
ஆயிரம் முத்தங்கள்…..
உன் மார்பில் தலைசாயும் நேரத்தில்
உன் விரல் என் தலைகோத…
பன்னீர் பூக்களின் நிழலில்
பவுர்ணமி நிலவின் ஒளியை
இரவு முழுவதும் ரசித்திருப்பேன்












Click it and Unblock the Notifications