கலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005 புனிதாவைப் பார்த்தாயாஎன பால்யனிடம் வினவினேன்ஞாபகத்தின் மடிந்த பக்கங்கள்கசியும் வாசனையால்நீட்சி அடையசேர்ந்தே வருகிறதுபூக்களின் சுகந்தமும் புனிதாவின் நினைவுகளும்பனியில் பதுங்கும் சூரியன்இவள் விரல்பட்டு விரியும்மார்கழி முற்றங்கள்வர்ணத்தின் துகள்களாய்கைகளின் மாயத்தில்முகம் பூசிக் கொள்ளும்தூக்கக் கலக்கத்தில்திறக்கும் விடியலில்மலரின் வனத்தினுள்இவளின் சுவடுகளே முதலில் பதியும்ஒற்றைப் பூவுக்கேகையறு நிலையில்யாவரும் விழித்திருக்கபரிச்சயமானவற்றை பரிசாக பகிர்ந்தளித்துஅதிசய அரும்புகளுடன்வெளிப்படுவாள் வனத்தின் விளிம்புகளில் ஊரையேஒற்றைப் பூவாக சுருட்டவாசனையின் வசீகரம்நாசிகளில் ஒட்டிக் கொள்ளும்ஏழ்நிற இதழ்கள் விரிந்தசொல் அறியா மலரொன்றுஇவள் வீட்டு முற்றத்தில்வர்ணக் கோலங்களில் கொலு அமரகுழந்தைகளின் ஏக்கங்கள்பூக்களில் படியும்நிறங்களை அரசாளும்அரும்பும் விருட்சம்அறிய முடியா ரகசியமாய்வனத்தினுள்எங்கோ கிளைத்திருக்கபுனிதா எங்கேஎன்றபால்யனிடம்பறித்த மலரொன்றுநிறங்களை உதிர்த்துவிட்டஒருநாளின் பின்யாரும் பார்த்ததில்லை என விளம்பமலர் வனத்தினுள்வாசனை விசித்த காற்றில்பூவுக்கு இரஞ்சும்குழந்தைகளின் அரூபஒலிஅங்கோர் புதிர்பாதையில்கிளை தெரியா விருட்சத்தில்பூக்காத மலரொன்றில்மறைகிறாள்பூக்களின் அரசியாக2. கூந்தலின் வரிகளில் சுழற்றி வீசுகிறாள்நெடிய இரவினைவிரி கூந்தலின்ஒரு பூவெனகலந்த கனவுகளும் கலையாத இருளும்கூந்தலின் வரிகளாகிசூரியனை சுற்றி இழுக்க ஒளி திசை நோக்கிஆங்காரமாய் எழுகிறதுமென்கூந்தலில்உதிரும் மலரில் மறைகிறதுமோனத்தின் நிலவுயார் யாரோஉதிர்வுகொள்ளசிக்கலெடுக்கும் அதன் சிகையில் சூன்யமாய் நீள்கிறதுபகல்இருளின் ஊற்றுக் கண்தேடிசுருளும் குழலில்கட்டுகிறாள் இரவையும்மாயத்தில்நட்சத்திரங்களையும்.