Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளும் மீனம் ராசி.. ஆபத்தும் காத்திருக்கு கவனம்
Meenam Rasi Palan: மார்ச் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 17 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசியினருக்கு செல்வாக்கு கூடும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். தினந்தோறும் உடற்பயிற்சியைத் தவறாமல் செய்வது நன்மை தரும். மேலதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசுத் துறையினர், உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீரென உங்கள் மீது தேவையில்லாத பழி வரும். நிறைய நியாபக மறதி ஏற்படும் என்பதால் முக்கியமான விஷயங்களை எழுதி வைத்துக் கொள்வது நல்லது.
யோக பலன்கள்
தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக எதிர்பாராத அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் நல்ல காலகட்டம். இழுபறியாக இருந்து வந்த பலவிதமான சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் நல்ல காலகட்டம். ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நன்மை பயக்கும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
வாக்குவாதம் வேண்டாம்
கையெழுத்து போடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு, இருமுறை படித்துப் பார்ப்பது நல்லது. ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். செக் கொடுப்பதில், ஜிஎஸ்டி விஷயங்களில் கவனம் தேவை. மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும் நல்ல காலகட்டம். செல்வாக்குகள் கூடும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நல்ல ஏற்றங்களும், நன்மைகளும் ஏற்படும். தலைவலி, ஒற்றை தலைவலி, சைனஸ், முதுகு தண்டுவடம், கழுத்து வலி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நரசிம்மர், பைரவர், உக்கிர தெய்வ வழிபாடு, வாராஹி வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications