குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் ரிஷபத்திற்கு வரும் ஜென்ம குரு.. சந்திக்கப்போகும் சவால்கள்
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை மாதம் குரு பகவான் மே 1ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் பலரது வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி ரிஷபம்: ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். தேவ குருவான வியாழ பகவான் அசுர குருவான சுக்கிரன் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். ஜென்ம ராசியில் அமரப்போகும் குரு ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறார். விரைய ஸ்தானத்தில் ஓராண்டு காலம் பயணம் செய்ய போது நிறைய சுப விரைய செலவுகள் ஏற்பட்டது. ஜென்ம ராசியில் அமரப்போகும் உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடப்போகிறது. இடமாற்றம் ஏற்படப்போகிறது.

குரு பகவான் பார்வை: குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளின் மீது விழப்போகிறது. பிள்ளைகளால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். திருமண பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதியதொரு மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். குரு பகவானின் பார்வை 5ஆம் வீட்டில் உள்ள கேதுவின் மீது விழுவதால் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
லாபம் அதிகரிக்கும்: தொழில் போட்டிகள் நீங்கும். வியாபாரம் சிறக்கும் லாபம் அதிகரிக்கும். 7ஆம் வீட்டின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் வீடு, இடம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. குரு பலன் வந்து விட்டதால் குழந்தை பாக்கியத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது. காதலித்துகொண்டிருப்பவர்களுக்கு வீட்டில் பெற்றவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்யும் நல்ல காலம் கைகூடி வரப்போகிறது.
வேலையில் முன்னேற்றம்: குரு பகவான் பார்வை 9ஆம் வீட்டின் மீது விழப்போவதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. 8 மற்றும் 11ஆம் வீட்டிற்கு அதிபதியான குரு குரோதி ஆண்டில் உங்கள் ராசியில் அமர்ந்து பயணம் செய்யப்போவதால் நிச்சயம் இடமாற்றத்தை தரப்போகிறார். சவால்களை சந்திக்கப்போகிறீர்கள். தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப கவுரவப்பதவிகள் தேடி வரப்போகிறது.
பாராட்டுகள் குவியும்: பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் அதிகரிக்கும் என்றாலும் கவனம் தேவை. சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. தெரியாத தொழிலில் இறங்கி அதிக முதலீடு செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள். எந்த காரியம் செய்வதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. குரு தசை நடந்தால் கோடீஸ்வர யோகத்தை கொட்டிக்கொடுப்பார் குரு பகவான்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications