கூர் நாசி.. திரண்ட உதடுகள்.. பெண்களின் உடம்பில் சந்தன வாசனை.. அதிர்ஷ்டம் சும்மா அள்ளுமாம்!
பெண்கள் எப்படி இருக்கணும் தெரியுமா மூக்கும் முழியுமா பளிச்சுன்னு நல்ல வாசனையோட சாமுத்திரிகா லட்சணப்படி எப்படி இருந்தால் பெண்கள் செல்வ செழிப்போட வாழ்வாங்கலாம்.
சென்னை: உன் செவ்வரி ஓடிய கண்களும் கூரான நாசிகளும், குறுகிய உடுக்கை போன்ற இடையும் என்னை இரவெல்லாம் தூங்க விடாமல் செய்கிறது என்று கவிஞர்கள் கவிதை எழுதுவார்கள். இப்போது 'காந்த கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏற்றும் முத்துப்பல்லழகி'என்று பாடுகிறார்கள் கவிஞர்கள். பெண்களுக்கு சில சாமுத்திரிகா லட்சணங்கள் இருக்கிறது. அப்படி அம்சமாக இருந்தால் பெண்கள் செல்வ செழிப்போடு இருப்பாங்க, குடும்பமும் வளமாக இருக்குமாம்.
பெண்களின் சாமுத்ரிகா லட்சணம் பற்றி நிறைய புத்தகங்களில் எழுதியிருக்காங்க. உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் எப்படி இருக்கணும்னு சொல்லியிருக்காங்க. பெண்களின் அங்க லட்சணங்கள் இப்படி எல்லாம் இருந்த ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லியிருக்காங்க. கல்யாணத்திற்கு பெண் பார்க்கப் போற ஆண்கள் உங்களுக்கு வரப்போகிற மனைவிக்கு சில அம்சங்களாவது இப்படி இருக்கான்னு பார்த்து செலக்ட் பண்ணுங்க.
உருண்டை வடிவ முக அமைப்பு கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். பூஜை, விரதங்களில் நிறைய ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பாங்க. நல்ல லட்சியவாதிகளாவும் இருப்பாங்க. நல்ல குணவதியான அவங்களால கணவருக்கு அதிர்ஷ்டம் அதிகம் வருமாம். சாமுத்ரிகா லட்சணம் பெண்களின் முகம் குறித்து மட்டுமல்ல. கண்கள், மூக்கு, நெற்றி, காது, கழுத்து, இடை, தொடை என காலின் கட்டை விரல் வரைக்கும் விலாவாரியாக விவரித்துள்ளது.

செதுக்கிய வடிவ அமைப்பு
நவகிரகங்களும் நன்றாக இருந்தால் முக அமைப்ப அற்புதமாக இருக்கும். சந்திரன், சுக்கிரன் சரியாக இருந்தால் பெண்கள் அழகாக இருப்பார்கள். அங்க லட்சணங்கள் அம்சமாக இருக்கும். நாசி, கண்கள், நெற்றி அமைப்பு போன்றவை சாமுத்ரிகா லட்சணத்திற்கு ரொம்ப முக்கியம். நிலவு ஒரு பெண்ணாகி உலவு கின்ற அழகோ என்று பாடியிருப்பார்கள் பெண்களின் முகம் நிலவு போல பளிச்சென்று இருந்தால் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.

நிலவு போன்ற முகம்
பெண்களோட கண்கள் சிவந்து நீண்டு இருக்கணுமாம். அடிக்கண் அகன்று மாவடுபோல் இருக்கணும். விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். புருவம் வில்லைப்போன்று வளைந்திருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். முகத்திலுள்ள மூக்கின் நீளம், கண்களின் இருப்பிடம் மற்றும் தாடையின் நீளம் என அளவெடுத்து செய்தது போல இருக்கணும்.

மென்மையான கூந்தல்
பெண்களின் கூந்தல் கருங்கூந்தலாக இருக்க வேண்டும். அவங்களுக்கு இருக்கிற தலைமுடி மாதிரிதான் வாழ்க்கை அமையுமாம். கோரை முடி குடியை கெடுக்கும் சுருட்டை முடி சோறு போடும் என்பார்கள். கூந்தலில் மலர் மணம் வீசினால் அந்த பெண்கள் இயற்கையிலேயே ரொம்ப அற்புதமானவர்கள். தலைமுடி எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை அமைதியாக மென்மையாக போகும்னு சொல்லுவாங்க. தலைமுடி மொர மொரப்பா இருந்தா அவங்க வாழ்க்கை கரடுமுரமாக இருக்குமாம். கஷ்டப்பட்டு உழைத்துதான் சாப்பிட வேண்டியிருக்குமாம்.

நெற்றி வடிவம்
நெற்றி மேடாகவும் நெற்றியில் 2 அல்லது 3 கோடுகளும் இருந்தாலும் கோடுகள் இருந்தால் சிந்தனைவாதிகளாகவும் அறிவாளிகளாவும் இருப்பார்கள்.
மூக்கின் நுனி கூராக இருந்தால் ரொம்ப புத்திசாலியாக இருந்தால் அதி புத்திசாலியாக அரசாளும் அமைப்போடு இருப்பார்களாம்.

பெண்களின் காது அமைப்பு
சீரான செதுக்கியது போல மூக்கு கொண்டவர்களுக்கு வாழ்க்கை சீராக இருக்கும். குடை மிளகாய் போல மூக்கு கொண்டவர்கள் கொஞ்சம் பயங்கரமானவர்களாக இருப்பார்கள். காது அமைப்பு குறுகியிருந்தால் மனதும் சிந்தனையும் குறுகலாக இருக்குமாம். பரந்த காதுகளை கொண்டவர்களுக்கு பரந்த மனதாக இருக்குமாம்.

தொடை அமைப்பு
பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும். பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை வந்தால் அவங்க செல்வச் செழிப்போட இருப்பாங்களாம். தொடை வாழைத்தண்டு போல பளபளப்பாக இருக்கணும்.

பாத வடிவம்
பெண்ணின் பாதம் செந்தாமரை போல சிவப்பாக இருக்க வேண்டும். ஐந்து விரல்களும் பூமியில் பதிய வேண்டும். குதிகால் அகலமாக இருக்கவேண்டும். பெருவிரல் நீண்டிருக்க வேண்டும். இத்தனை அம்சங்களும் கொண்ட பெண் மனைவியாக வந்தால் அதிர்ஷ்டம்தான் இதே
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications