பழனியில் தைப்பூசம் கோலாகல கொடியேற்றம் - திருக்கல்யாணம், தேரோட்டம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை
தைப்பூசம் திருவிழா பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் பங்கேற்கவில்லை.
பழனி: தைப்பூசத் திருவிழா பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதன்முதலாக பழனி தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம்,திருத்தேரோட்டம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. அதிலும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி, முருக பெருமானுக்குரிய வழிபாட்டில் முக்கிய நாளாக இருக்கிறது. தை மாதம் பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்த நாளாக தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச திருநாள் கொண்டாடப்படுவதற்கு தமிழர்களின் வானியல் அறிவும் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. பூசம் என்பது வானில் இருக்கும் ஒரு நட்சத்திர கூட்டம்.

தமிழர்கள் திருநாள்
தைப்பூசத்தன்று சூரியன் மகர ராசியிலும் சந்திரன் பூச நட்சத்திரத்தில் கடக ராசியில் வடக்கும் சஞ்சரிக்கும். இந்த நாளை சிறப்பான நாளாக உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் இந்த தைப்பூச திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர் பலவிதமான நேர்த்திக்கடன்களை பய பக்தியுடன் செலுத்துவது வழக்கம். அழகு குத்தியும் காவடி சுமந்தும் முருகன் ஆலயங்களுக்கு வருவார்கள்.

தைப்பூசம் கொடியேற்றம்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள். இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் இன்று காலை 6.30மணிக்குமேல் யாக வேள்வியுடன் வேதமந்திரங்கள் முழங்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்று கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகள்
கொடிமரத்தின் அருகே எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி,தெய்வானைக்கு தீபாராதானை நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் அமலில் உள்ளதால் முதன்முதலாக பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்களின்றி வெறிச்சோடிய நிலையில், திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் தைப்பூசக் கொடியேற்றம் நடைபெற்றது.

தைப்பூச தேரோட்டம்
தைப்பூச விழா இன்று முதல் 10நாட்களுக்கு நடைபெறும். நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி வெள்ளி ஆடு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம், புதுச்சேரி சப்பரம், தங்கக் குதிரை, தங்க மயில் போன்ற வாகனங்களில் தைப்பூசத் திருவிழாவின் 6ம் நாள் திருவிழாவான 17ம்தேதி நடைபெறும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம்,7ம்நாளான 18ஆம்தேதி நடைபெறும் திருத்தேரோட்டம் ஆகிய நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications