திருப்பதி ஏழுமலையானை பாதையாத்திரையாக தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்
அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும்.
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரண்டு நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருப்பதியில் நேற்று 75,016 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,116 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.59 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறப்பு
திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர், "புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. வருகிற 5ஆம் தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.

தங்க சிம்மாசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3.60 கோடி ரூபாயில் தங்க சிம்மாசனம் தயார் செய்யப்படும். அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரண்டு நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும்" என்று கூறினார்.

மும்பையில் வெங்கடேஸ்வரா கோவில்
மும்பையில் வெங்கடேஸ்வரா கோவில் கட்டுவதற்காக மகாராஷ்டிர அரசு 10 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக வழங்கி உள்ளது. அரசு வழங்கிய நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.அங்கு ரேமண்ட்ஸ் நிறுவனத் தலைவர் கவுதம் சிங்கானியா கோவில் கட்ட முன்வந்துள்ளார்.
திருப்பதியில் ரூ.20 கோடியில் பத்மாவதி மருத்துவக் கல்லூரி கட்டப்படும்.

மின்சார பஸ் நிலையம்
சீனிவாச சேது பாலத்தின் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ளது. அந்த பாலத்தை 5ந் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார். இதையடுத்து 2வது கட்டமாக பாலம் கட்டும் பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணி வருகிற 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். நிபுணர்களின் பரிந்துரைப்படி திருப்பதி மலைப்பாதையை பலப்படுத்த 2வது கட்டமாக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதிகளை சீரமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்படும். திருமலை பாலாஜி நகரில் 2.86 ஏக்கரில் மின்சார பஸ் நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications