வைகுண்ட ஏகாதசி: திருமலையில் 5 நாட்களுக்கு சேவைகள் ரத்து - 24 மணிநேரம் மலைப்பாதை திறப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 28ஆம்தேதியில் இருந்து ஜனவரி 1ஆம்தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், சிபாரிசு கடிதங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 24 மணி நேரமும் பக்தர்களுக்காகத் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும் எனத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் துவாதசியன்று திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சுக்கு வெளியே நாராயணகிரி பகுதியில் பக்தர்களுக்காக 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்காலிக வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 29ஆம்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அன்று அதிகாலை நேரத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறந்ததும் அதிகாலை 5.30 மணியளவில் முதலில் விஐபி தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பின்னர் காலை 8 மணியளவில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏகாதசி தரிசனத்துக்காக வரும் இலவச தரிசன பக்தர்கள் 28ஆம்தேதி காலை 10 மணியளவில் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்படுகின்றனர். துவாதசி அன்று விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த விஐபிகளுக்கு ஒரு டிக்கெட் வீதம் வழங்கி, அந்த ஒரு டிக்கெட்டுக்கு 6 பேர் வரை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், அரசு அதிகாரிகளைச் சேர்ந்த விஐபிகளுக்கு ஒரு டிக்கெட் வீதம் வழங்கி, அந்த ஒரு டிக்கெட்டுக்கு 4 பேர் வரை சாமி தரிசனத்துக்கு அனுமதிப்படுகின்றனர்.
பக்தர்கள் வரிசையில் செல்ல, திருமலையில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசன வரிசைகள் மற்றும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க கொட்டகைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 28ஆம்தேதியில் இருந்து ஜனவரி 1ஆம்தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், சிபாரிசு கடிதங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் நடைபாதை பக்தர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த 5 நாட்களும் 24 மணி நேரமும் திருப்பதி-திருமலை இடையே மலைப்பாதை திறந்தே இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவச உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications