மிதுன ராசியினருக்கு கடன் பிரச்சனை ஓவர்.. மாற்றத்துக்கான நேரம் ஆரம்பம்.. இனி தொட்டதெல்லாம் துலங்கும்
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்கும் போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 9 இல் ராகு, 3 இல் கேது உள்ளார். திருச்செந்தூரில் முருகனை வழிபடுவது சகலவித நன்மைகளைத் தரும். தலைவலி, ரத்த அழுத்தம், இடதுபக்க தேக ஆரோக்கியம், தாய், தந்தை, சகோதர, சகோதரிகளின் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டில் பெற்றோர், மனைவி, கணவரிடம் கோபத்தை, கடுஞ்சொல் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
தடைகள் நீங்கும்
சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். துணைக்கு இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். தெய்வீக கைங்கரியங்களை அதிக அளவில் செய்வீர்கள். தாய் தந்தையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உத்தியோகம், தொழில், வேலை, வியாபாரம், கல்வியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இது மாற்றத்துக்கான நேரமாக உங்களுக்கு அமையும்.
ராஜமரியாதை
ஜீவசமாதி அடைந்திருக்கும் சித்தர்கள், ஞானிகள் வழிபாடு அனைத்துவிதமான பிரச்சனைகளையும் தடுக்கும். பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை நிமித்தமாக அலைச்சல் இருந்தாலும் பெரிய அங்கீகாரம், ராஜமரியாதை கிடைக்கும். அனைவராலும் புகழ்ந்து பாராட்டப்படுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கடன் தீரும்
தைரியமாக எந்தவித மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது. பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். தெய்வத்தின் கருணை உண்டாகும். தெய்வ தரிசனம், சித்தர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மகான்கள் தரிசனம் நல்ல பலன்களைத் தரும்.
முன்னேற்றம்
கொதிக்கும் நீரில் குங்குமப்பூ கலந்து குடிப்பது நல்ல பலன்களைத் தரும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications