"குறி வச்சா இறை விழுணும்".. ரிஷப ராசிக்கு இனி தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. என்ஜாய்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மேன்மை காணப்படும். வெள்ளிக்கிழமைகளில் இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய் வழிபாடு நல்ல பலன்களைக் கொடுக்கும். காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, சைனஸ், தலைசுற்றல் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. பல்லில் வரும் பிரச்சனைகளை கவனிக்காவிட்டால் பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
தொழிலில் முன்னேற்றம்
பழைய கடன்களை கட்டி முடிப்பீர்கள். மனதில் இதுவரை இருந்து வந்த மன அழுத்தம் நீங்கும். தொழில் ரீதியான முன்னேற்றம், மன அழுத்தம் தீரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். உள்ளூர், வெளியூர், பதவி உயர்வு தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளுக்கு உங்கள் மீது முழு நம்பிக்கை உண்டாகும். அரசாங்க ரீதியான கெளரவத்தைப் பெறுவீர்கள்.
அனுகூலம்
அரசு உத்தியோகத்தில் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் கிடைக்கும். எடுத்த விஷயங்களில் முன்னேற்றத்தையும், வெற்றியையும் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள், தடைகள் பரிபூரணமாக நீங்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக நீங்கும். யோகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் காலகட்டம்.
சிக்கல்கள் நீங்கும்
உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் நிவர்த்தியாகும். செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் மீது அக்கறை கொள்வார்கள். வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். அரசியல், அரசுத் துறையில் இருப்பவர்கள் மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெறுவீர்கள். திட்டமிட்டு ஒவ்வொரு செயல்களையும் செய்து முடிப்பீர்கள். நல்ல ஒரு பணி குழு கிடைக்கும். உங்களுடன் பணியாற்ற எதிர்பார்த்துக் காத்திருந்த நபர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.












Click it and Unblock the Notifications