கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கன்னியாகுமரியில் நடத்திய ரோடு ஷோ தற்போது அரசியல் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக அவர் திடீரென சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரித்த சம்பவம் ரசிகர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
காரைக்குடியில் சைக்கிள் ஓட்டிய காட்சிகள் வைரலானதற்குப் பிறகு, அதே ஸ்டைலை கன்னியாகுமரியிலும் தொடர்ந்த விஜய், கூட்டத்துக்குள் நேரடியாக சென்று மக்களுடன் கலந்துகொண்டது அவரது பிரச்சாரத்தில் ஒரு தனி திருப்பமாக பார்க்கப்படுகிறது.

சைக்கிள் பின்னணி
விஜய் சைக்கிள் ஓட்டியது ஒரு திடீர் முடிவு போல தெரிந்தாலும், அதற்குப் பின்னால் இருந்த ஏற்பாடுகள் தற்போது வெளியாகி சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது.
கன்னியாகுமரியில் உள்ள ஒரு பிரபல சைக்கிள் கடைக்கு, விஜய்யின் நிர்வாகிகள் முன்னதாகவே சென்று மூன்று சைக்கிள்களை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதற்காக வாங்குகிறோம் என்று கடைக்காரர்களிடம் சொல்லவில்லையாம்.
அப்போது சைக்கிளை உயரமான ஒருவருக்கு பொருத்தமாக செட் பண்ண சொல்லியிருக்கிறார்கள். இதை பார்த்த கடைக்காரர்களுக்கு "யாருக்காக இது இருக்கும்?" என்ற சந்தேகம் வந்தாலும், நேரடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் அந்த மூன்று சைக்கிள்களையும் ஒரு டெம்போவில் வைத்து, முழுமையாக மூடி எடுத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகுதான் விஜய் சைக்கிள் ஓட்டிய வீடியோக்கள் வெளியானதும், "அது நம்ம கடையிலிருந்து போன சைக்கிள் தான்!" என்று கடைக்காரர்களுக்கே புரிந்ததாம்.
சைக்கிளின் விலை
பலர் எதிர்பார்த்த மாதிரி லட்சக்கணக்கில் இருக்கும் சைக்கிள் இல்லை. விஜய் ஓட்டிய அந்த சைக்கிளின் விலை சுமார் ₹20,000 தான் என்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஸ்டார் இமேஜ் இருந்தாலும், மக்களுடன் கலந்துகொள்ள விஜய் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
குழந்தைகளுக்கே புதிய ஆசை
இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த சைக்கிள் கடையில் ஒரு சின்ன மாற்றமே நடந்திருக்கிறது. நேற்று மாலையே கடைக்கு வரும் சிறுவர்கள் பலரும், "எங்களுக்கும் விஜய் ஓட்டியது போல அந்த வெள்ளை கலர் சைக்கிள் வேண்டும்" என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
இதைக் குறித்து கடைக்காரர்கள், "இது எங்களுக்கு ரொம்ப பெரிய விஷயம்... விஜய் ஓட்டியதாலே டிமாண்ட் அதிகமா இருக்கு" என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.
மக்கள் வெள்ளத்தில் விஜய்
விஜய் சைக்கிள் ஓட்டியதும், சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்தனர். ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து, போக்குவரத்தே பாதிக்கப்பட்டது. முன்னதாக காரைக்குடியில் கூட்டத்தில் சற்று தடுமாறிய அனுபவம் இருந்ததால், இந்த முறை காவல்துறையும், தன்னார்வலர்களும் பாதுகாப்பை அதிகரித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications