நான் அப்பவே சொன்னேனே.. நயினார் வைத்து, விஜய் -சங்கீதா விவாகரத்து பற்றி ப்ளூ சட்டை மாறன் குதர்க்கமான போஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டிலேயே நேற்று முதல் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்குதான். சினிமா, அரசியல், ரசிகர்கள் வட்டாரம் என எங்கு பார்த்தாலும் இதைப்பற்றிய பேச்சுதான் சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி தமிழ் சினிமாவின் மிகவும் பிடித்தமான குடும்பமாகவே பார்க்கப்பட்டது. 1999-ல் நடந்த திருமணத்திற்கு பிறகு மகன் சஞ்சய், மகள் திவ்யா என இரண்டு குழந்தைகளுடன் அமைதியாக இருந்த குடும்பம் திடீரென நீதிமன்றம் வரை சென்றிருப்பது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகி இருக்கிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்தான் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ள குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
சங்கீதா தனது மனுவில், 2021 ஏப்ரல் மாதம் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது தெரிந்தது. அது தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. அந்த உறவை முறித்துக்கொள்வதாக விஜய் உறுதி அளித்தாலும் எந்த மாற்றமும் நடக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக மனதளவிலும், உணர்ச்சியளவிலும் தன்னை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அந்த நடிகையுடன் வெளிநாட்டு பயணங்கள் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வெளியானது குடும்பத்துக்கு அவமானமாக இருந்தது என்று குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் வெளியானதும், "இது உண்மையா?", "அரசியல் பின்னணி ஏதாவது இருக்கிறதா?" என்று ரசிகர்கள் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியிருக்கிறார்கள்.
ரசிகர்களின் எதிர்வினை
விஜய்யை குடும்ப மனிதராகவே பார்த்த ரசிகர்கள் பலருக்கு இது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. சிலர் இது முழுக்க அரசியல் தாக்குதல் என்று கூற, இன்னொரு பகுதி "நீதிமன்ற விஷயம்... உண்மை வெளிவரும் வரை காத்திருக்கலாம்" என்ற மனநிலையில்தான் இருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
இந்த சூழலில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவு விவகாரத்தை இன்னும் சூடாக்கியது. தனது எக்ஸ் பக்கத்தில், நயினார் (மைண்ட் வாய்ஸ்): "இதைத்தானே நான் முன்னாடியே சொன்னேன்... அப்போ என்னை சுற்றி அடித்து மன்னிப்பு கேட்க வைத்தீங்களே... இப்போ ஏன் டா இப்படி?" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு நேரடியாக ரசிகர்களை சுட்டது போல இருந்ததால், "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல" என்ற ரியாக்ஷன்தான் அதிகமாக வந்தது.
நயினார் நாகேந்திரன் பேச்சு மீண்டும் வைரல்
இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறிய, "ஒரு நடிகையின் வீட்டில்தான் விஜய் இருக்கிறார்... அங்கிருந்து வெளியே வந்தால்தான் அரசியலில் நடமாட முடியும்" என்ற பேச்சும் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேச்சுக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் அவர் மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடப்பட்டது. இப்போது அந்த சம்பவம் மீண்டும் இழுக்கப்பட்டு பேசப்படுகிறது.
அரசியல் + சினிமா + தனிப்பட்ட வாழ்க்கை
சாதாரணமாக ஒரு நடிகரின் குடும்ப விஷயம் இவ்வளவு பெரிய அளவில் பேசப்படாது. ஆனால் இங்கே விஷயம் வேற மாதிரி.. விஜய் தற்போது அரசியலில் இருக்கிறார். கட்சி தொடங்கி இருக்கிறார், தேர்தல் அரசியல் சூழல் உள்ளது. எனவே இது முழுக்க தனிப்பட்ட விஷயமா? அரசியல் கோணம் உள்ளதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது.
அடுத்து என்ன?
மார்ச் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. விஜய் நேரில் வருவாரா, வழக்கறிஞர் மட்டும் ஆஜராகுவாரா, அல்லது இரு தரப்பும் சமரசம் செய்ய முயற்சிப்பார்களா என்பது அடுத்த கட்ட கவனம்.
நயினார்:
— Blue Sattai Maran (@tamiltalkies) February 27, 2026
இதத்தானடா கொஞ்ச நாளைக்கி முன்னால சொன்னேன்? அதுக்கு ரவுண்டு கட்டி அடிச்சி மன்னிப்பெல்லாம் கேக்க வச்சீங்களே..
ஏன்டா இப்படி? https://t.co/1BhRQy5Aka
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி












Click it and Unblock the Notifications