என்னாது நார்வே வன்முறையில் போலீஸாரின் கார் எரிப்பா.. பொய் செய்தி.. இது அமெரிக்கா வன்முறை!
டெல்லி: நார்வேயில் நடந்த வன்முறையின் போது கார் ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சிகள் மிகவும் கொடூரமாக உள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அது முற்றிலும் தவறான தகவலாகும். படமும் நார்வேயில் எடுக்கப்பட்டது அல்ல. அமெரிக்காவில் ஓஸ்லோவில் எடுக்கப்பட்டது.
சமூகவலைதளங்களில் ஒரு கார் எரிவது போன்ற காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கூறுகையில், நார்வேயில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்கள். இது பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது.

இந்த சம்பவத்தை எந்த ஊடகங்களும் பதிவு செய்யவில்லை. ஸ்கான்டிநவியாவில் நடத்தப்பட்ட வன்முறை மிகவும் அரிதானது. இதற்கு முன்னர் இப்படி ஒன்று நடந்ததே இல்லை.
முக்கிய ஊடகங்களும் இதை கண்டுக்கொள்ளவேயில்லை. அவர்களை பொருத்தவரை இது ஒரு நிகழ்வு என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த புகைப்படம் குறித்த உண்மையை ஆராய்ந்த போது இது நார்வேயில் எடுக்கப்பட்டதல்ல.
இது சிகாகோவில் எடுக்கப்பட்டது. மே மாதம் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் அங்கிருந்த போலீஸாரின் காருக்கு தீ வைத்து எரித்தனர். இந்த புகைப்படம்தான் தற்போது நார்வே வன்முறை என கூறுவது தவறான செய்தியாகும். இதே புகைப்படம் சிகாகோ சன் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நார்வேயில் நடந்த வன்முறையின் போது கார் ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சிகள் மிகவும் கொடூரமாக உள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
முடிவு
இது சிகாகோவில் எடுக்கப்பட்டது. மே மாதம் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம்












Click it and Unblock the Notifications