FACT CHECK: இப்படி ஒரு உத்தரவா? ராணி எலிசபெத் இறுதி சடங்கு நாளில் மற்ற உடல்களை அடக்கம் செய்ய தடையா?
லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும் செப்டம்பர் 19 ஆம் தேதி வேறு யாருக்கும் இறுதிச்சடங்குகள் நடைபெறக் கூடாது என்று உத்தரவிடப்பட்டதாக வெளியான செய்தியின் உண்மைத் தன்மை பற்றி அலசுவோம்.
பிரிட்டன் ராணி 2 வது எலிசபெத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலிசபெத் ராணி கடந்த 8 ஆம் தேதி லண்டனில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். எலிசபெத் மரணத்தை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க இது தொடர்பான செய்திகளே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

செப்டம்பர் 19
ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்த எலிசபெத்தின் உடல் நேற்று லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டது. அடுத்த சில நாட்கள் ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படும். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் செப்டம்பர் 19 அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி ஒரு உத்தரவா?
இந்த நிலையில், மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும் செப்டம்பர் 19 ஆம் தேதி வேறு யாருக்கும் இறுதிச் சடங்கு செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 19 ஆம் தேதி இறுதிச் சடங்கிற்கு திட்டமிட்டிருப்பவர்கள் வேறு நாளுக்கு தள்ளி வைக்குமாறும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

குழப்பமும் கேள்வியும்
முக்கிய ஊடகங்கள் எதிலும் வெளியாகமல் சமூக வலைதளங்களில் மட்டும் வெளியான இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. பலரும் இதற்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்து இருக்கின்றனர். ஆனால், எலிசபெத் மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், "பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் பிரத்யேகமாக எந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டாம்." என்று குறிப்பிட்டுள்ளது.

உண்மை என்ன?
இதுகுறித்து இறுதிச் சடங்கு இயக்குநர்களின் தேசிய சங்கம் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, "இறுதிச் சடங்கு சேவை 24 மணி நேரமும் நடக்கக்கூடியவை. அனைத்து குடும்பங்களுக்கும் சம உரிமையும் அக்கறையும் உதவியும் அவசியம். செப்டம்பர் 19ம் தேதி இறுதிச் சடங்குகள் நடக்கின்றனர். சிலர் தங்களின் சொந்த காரணங்களுக்காக வேறு நாட்களுக்கு ஒத்திவைக்கிறார்கள்." என்று குறிப்பிட்டுள்ளது. எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி தவறானது என உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
பிரிட்டன் மகாராணி 2வது எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும் செப். 19 அன்று வேறு யாருக்கும் இறுதிச்சடங்குகள் நடைபெறக் கூடாது என்று அரசு உத்தரவு
முடிவு
இதுபோன்ற எந்த உத்தரவுகளும் அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை
ரேட்டிங்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications