For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 அல்லது 10ம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதும்.. ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு.. 1664 பணியிடங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள வட மத்திய ரயில்வே (NCR) பணியாளர் சேர்க்கையை துவங்கியுள்ளது.

இந்தியன் ரயில்வேயின் வட மத்திய ரயில்வேயில், பிரயாக்ராஜ், ஆக்ரா, ஜான்சி ஒர்க் ஷாப் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. ஐடிஐ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.

North Central Railway Job Recruitment: Vacancies for 10th pass, full detail

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய துவக்க தேதி 2021 ஆகஸ்ட் 2. ஆன்லைன் விண்ணப்பத்தின் கடைசி தேதி - 2021, செப்டம்பர் 1.

வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ .100 சமர்ப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்சி/எஸ்டி/பிடபிள்யூடி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தகுதி வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி கொண்டவராக (10+2 நடைமுறை) இருக்க வேண்டும்.

வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்), வயர்மேன் மற்றும் தச்சர் பணியிடங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ / டிரேட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மொத்தம், 1664 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. rrcpryj.org இல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

English summary
Job vaccent news in Tamil: The North Central Railway (NCR), division is conducting a recruitment drive and has invited applications for as many as 1664 vacancies. Candidates can apply for vacancies on rrcpryj.org.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X