ரயில்வே துறையில் 2659 காலியிடங்கள்! டிப்ளமோ படித்தாலே விண்ணப்பிக்கலாம்! இப்படியொரு சான்ஸ் கிடைக்காது
சென்னை: இந்தியன் ரயில்வேயில் காலியாக இருக்கும் ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் காலியாக இருக்கும் 2659 பணிகளை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்குக் கல்வித் தகுதி என்ன இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாட்டிலேயே மிக அதிகப் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும் துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருக்கிறது. இதற்கிடையே ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டிருந்தது.

ரயில்வே துறை
இதில் ஜூனியர் இன்ஜினியர் (JE), டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு (DMS) மற்றும் கெமிக்கல் & மெட்டலார்ஜிக்கல் அசிஸ்டென்ட் (CMA) ஆகிய பணியிடங்களை ரயில்வே துறை நிரப்பவுள்ளது. மொத்தம் 2,569 காலியிடங்கள் இருக்கும் நிலையில், இந்தப் பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தப் பணிகளுக்கு நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி (நான் க்ரீமி லேயர்) பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி
ஜூனியர் இன்ஜினியர் மற்றும் அது தொடர்பான பதவிகளுக்கு இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. அல்லது அது சார்ந்த துறையில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் (BE/BTech) பெற்றிருக்க வேண்டும். கெமிக்கல் மற்றும் மெட்டலார்ஜிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி என்ன என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இது குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான இரண்டு எழுத்துத் தேர்வு மூலம் இதில் தேர்வு செய்யப்படுவார்கள். முதற்கட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ₹35,400 சம்பளமாக வழங்கப்படும்.
முக்கியமான தகவல்கள்
என்ன பணி: ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு, கெமிக்கல் & மெட்டலார்ஜிக்கல் அசிஸ்டென்ட்
மொத்தக் காலியிடங்கள்: 2569
கல்வித் தகுதி: டிப்ளமோ முதல் பிஇ வரை (பதவியைப் பொறுத்து மாறும்)
சம்பளம்: ரூ.35,400
வயது வரம்பு: 18 முதல் 33 வயது (அரசு ஒதுக்கீட்டின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது)
தேர்வுக் கட்டணம்: ரூ.500
எஸ்பி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள், பெண்கள், சிறுபான்மையினருக்கு ரூ.250
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: நவம்பர் 30
தேர்வுக் கட்டணம் செலுத்தக் கடைசித் தேதி: டிசம்பர் 2
தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- அங்கு ஹோம் பக்கத்திலேயே "RRB JE Recruitment" என இருக்கும். அங்குக் கீழ் உள்ள "Apply" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- ஆதார் அட்டை மூலம் லாகின் செய்யலாம்.. அல்லது புதிய கணக்கை உருவாக்கலாம்.
- பின்னர், எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்தத் தரவுகளைப் பூர்த்தி செய்யுங்கள். கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
-
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரயில் டிக்கெட், பான் கார்டு.. இன்று முதல் மொத்தமாக மாறும் ரூல்ஸ்.. மக்களே இது தெரியாமல் இருக்காதீங்க -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர்












Click it and Unblock the Notifications