TN Police jobs: தமிழ்நாடு காவல்துறையில் 2,833 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. விட்றாதீங்க
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 2,833 பணியிடங்களை (TN Police jobs - TNUSRB) நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே ஆர்வமும் தகுதியும் இருந்து இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் மறக்காமல் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. கல்லூரி படிப்பின்போதே விளையாட்டுகளில் ஆர்வமாக சேர்ந்து போலீஸ் வேலை கனவுடன் படித்து வருகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்த பிறகு தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இதில் கான்ஸ்டபிள் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்த தேர்வர்களுக்கு கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

பணியிடங்கள் விவரம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மொத்தம் 2,833 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். 1.07.2023 படி குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 26 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. (வயது உச்ச வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. எனவே பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)
சம்பளம் எவ்வளவு?:
சம்பளத்தை பொறுத்தவரை இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான ஊதிய விகிதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் இன்று 21.09.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.tnusrb.tn.gov.in/












Click it and Unblock the Notifications