"அண்ணே... ஒரு மனிதாபிமானத்தோடு..."
இன்ஸ்பெக்டர் கவுண்டமணியும் ஏட்டு செந்திலும்..
இன்ஸ் கவுண்டர்: யோவ் ஏட்டு செந்தில்... இவன் பயங்கரமான கேடி.. மெட்ராஸில் இருந்து தப்பி இங்க வந்திருக்கான்..இவனை பத்திரமாக அடைச்சு வை...
ஏட்டு செந்தில்: யெஸ் சார்.. அப்படியே செய்றேன் சார்..
இன்ஸ் கவுண்டர்: இவன் என்ன கேட்டாலும் வாங்கித் தராதே.. ரொம்ப பேரை நடிச்சே ஏமாத்திருவான் ஜாக்கிரதை..
ஏட்டு செந்தில்: யெஸ் சார்.. அப்படியே செய்றேன் சார்..
இன்ஸ் கவுண்டர்: சரி.. நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வர்றேன்.. சூதானமாக பாத்துக்க
ஏட்டு செந்தில்: ஓகே சார்...
(சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் கவுண்டமணி திரும்பி வர)
இன்ஸ் கவுண்டர்: ஏட்டு செந்தில், அந்த ரவுடிய கூப்பிட்டு வா.. நைட் டிரெய்ன்ல மெட்ராஸுக்கு கூப்பிட்டு போகனும்..
ஏட்டு செந்தில்: சார்... அதுவந்து...
இன்ஸ் கவுண்டர் பதற்றமாகி.. ஏய்.. என்னடா அதுவந்து.. தப்பிக்க விட்டுட்டீயா
ஏட்டு செந்தில்: சார்.. தப்பிக்க எல்லாம் விடலை.. ஜஸ்ட் திறந்துதான் விட்டேன்...
இன்ஸ் கவுண்டர்: என்னது திறந்து விட்டியா? ஏன்டா திறந்துவிட்ட? என் பொழப்புக்கே வேட்டு வெச்சிட்டியே..
ஏட்டு செந்தில்: நான் ரொம்ப நேர்மையானவன்னு உங்களுக்கே தெரியும் சார்..
இன்ஸ் கவுண்டர்; அந்த கருமாந்திரம் இப்ப எதுக்குடா? எதுக்குடா அவனை திறந்துவிட்ட ?
ஏட்டு செந்தில்: அந்த ரவுடியோட அம்மா இந்த ஊர் ஹாஸ்பிட்டல்லதான் கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கிறாங்களாம்..
இன்ஸ் கவுண்டர்: அதுக்கு...
ஏட்டு செந்தில்: அவங்க சாக பொழக்க இருக்கிறதால அவங்களை பார்க்கனும் கேட்டான்..
இன்ஸ் கவுண்டர்: அவன் கேட்டான்னு தொறந்து விட்டுறவியா?
ஏட்டு செந்தில்: சார் நானும் ஒரு நெஞ்சு நெறஞ்ச "மனிதாபிமானத்தோடு' திறந்துவிட்டேன்..
இன்ஸ் கவுண்டர்: என்னது நெஞ்சு நெறஞ்ச மனிதாபிமானத்தோடு திறந்துவிட்டியா? எங்கேயே கேட்ட மாதிரி இருக்கேடா சாமீ....
ஏட்டு செந்தில்: நாட்டுல பெரியவங்களே பொறுப்பில இருக்கிறவங்களோ இது போல மனிதாபிமனாத்தோடு நடக்கிறாங்களே.. நானும் அவங்கலை பினப்ற்றி நடக்கலாம்னுதான்..
இன்ஸ் கவுண்டர்: ஆஹா. டேய். நீ என்னமோ வெவகாரத்தை பேசுறன்னு மட்டும் தெரியுது.. இதெல்லாம் ஆகற காரியமில்லை ஆளை விடுடா.. நானே சமாளிச்சுக்கிறேன்...