சோகம்!ரூ.70 திருடியதாக கொடூர தண்டனை.. 10 வயது சிறுமி உயிரிழப்பு.. போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி குறித்த போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் சமீபத்தில் வாய் மற்றும் வலது தொடையில் சூடு பட்டக் காயங்களுடன் 10 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அச்சிறுமி சூடு பட்டக் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

திடுக் தகவல்கள்
அதன்படி மருத்துவமனைக்கு வந்த போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து , அது தொடர்பான விசாரணையைத் தொடங்கினர். அப்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவரது 10 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டில் இருந்து 70 ரூயாய் திருடி உணவு பண்டங்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

கொடூர தண்டனை
இதையடுத்து அந்த 10 வயது சிறுமியைத் தண்டிக்கும் விதமாகத் தாயும் உறவினரும் சேர்ந்து வாய் மற்றும் வலது தொடையில் சூடு வைத்துள்ளனர். அத்துடன் நிற்காமல் மிளகாய் புகையையும் முகரச் செய்துள்ளனர். இவை எல்லாம் கடந்த ஜன. 6ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தீக்காயங்களுடன் அச்சிறுமி அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது தாயார் முதலில் அருகிலுள்ள மருந்தகத்தில் மருந்தை வாங்கி கொடுத்துள்ளார்.

சிறுமி உயிரிழப்பு
இருப்பினும், அப்போதும் சிறுமியின் காயங்கள் சரியாகவில்லை. இதனால் விபரீதத்தை உணர்ந்த பெற்றோர், முதலில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்குச் சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தான் அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தவிக்கும் தாய்
குழந்தைகள் சிறு சிறு தவறுகளைச் செய்வது என்பது இயல்பான ஒன்று தான். அதைப் பக்குவமான முறையில் எடுத்துக்கூறி குழந்தைகளைச் சரிப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடைமை. மாறாக, தவறு செய்த சிறுமிக்குப் பாடம் புகட்டுவதாக நினைத்துக் கொண்டு கொடூர தண்டை கொடுத்ததால், பெற்ற மகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார் இந்த தாய். இந்தச் சம்பவத்தில் போலீசார் தங்கள் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
-
கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் திடீரென தலை வைத்து படுத்த மன்சூர் அலிகான்! பதறிய போலீஸ்! ட்விஸ்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications