என்னையவே சந்தேகப்படுறியா.. கணக்குல எவ்ளோ மார்க் எடுத்த!
சென்னை: ATM-ல பணம் எடுக்க போறதுன்னா, அது ஒரு டென்ஷன் கலந்த நகைச்சுவை அனுபவம் மாதிரி தான் இருக்கும். அட்டையை கையில் எடுத்துப் போகும் போது "என்கிட்ட கூட பணம் இருக்கு"ன்னு பெருமையா தோன்றும். ஆனா கதவைத் தள்ளிப் போனவுடனே அந்த பெருமை பாதியிலே கரைந்துவிடும்.
அட்டை உள்ளே போடுற நேரம், மனசுக்குள்ள ஓடுற சிந்தனை "இந்த மாதம் எவ்வளவு கிரெடிட் கார்டு , ஆன்லைன் ஆர்டர், சில்லறை செலவுக்கு போச்சு? பாக்கி இருக்குதா?" என்கிற கேள்வி எழும். பின் நம்பர் அடிக்குற நேரம், பக்கத்துல நிற்குறவங்களுக்கு நாம பெரிய பணக்காரன் மாதிரி காண்பித்து கொள்வோம். ஆனா உண்மையிலே கணக்குப் பார்த்தால் நிலைமை தெரிந்து விடும்.

அடுத்து "பணம் எடு"ன்னு அமுக்கிய தருணமே உச்சக் கிளைமாக்ஸ். "இப்போ பணம் வரும் தானே? இல்ல கணக்கில் எதுவுமே இல்லையேன்னு அடியோடு சொல்லப்போகுதா?" என்ற அந்த சில நொடிகள் பரீட்சை முடிவு வர காத்திருப்பது மாதிரி இருக்கும்.
பணம் மெஷின்ல இருந்து வெளியே விழுந்தவுடனே முகம் பளிச்! *"ஆஹா, இன்னும் பிச்சைக்காரன் ஆகல"*ன்னு மனசுக்குள் கொண்டாட்டம். இதை விட காசே இல்லாத அக்கவுண்ட்ல பேலன்ஸ் செக் பண்றது, ட்ரான்ஸாக்சன் முடிஞ்சு கார்டு வெளிய எடுத்தாலும் ஆயிரம் தடவை கேன்சல் பட்டன் அமுக்குறதும் ஒரு இயல்பான வழக்கமாக இருக்கும். ATM க்கு வாய் இருந்தால் அழும் என்ற கதை தான்.




















Click it and Unblock the Notifications