என்ன பயப்படுறியா குமாரு? #ChennaiRains
சென்னையில் கனமழை இடைவிடாது மிரட்டி வந்த நிலையில் அதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வந்த நிலையில் இன்னும் இரண்டு நாள்களுக்கு மழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டால் இன்னும் மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு சமூகவலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.
இந்நிலையில் நெட்டிசன்கள் சென்னை மழை குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளனர். அவற்றை வாசகர்களுக்காக தொகுத்துள்ளோம்.
|
உங்க சேவை வேண்டும்
உங்க சேவை சென்னைக்கு இப்போ தேவை
|
பயப்படுறியா குமாரு
மொபைல் சார்ஜ் போட்டியா, பவர் பேங்க் சார்ஜ் போட்டியா,எமர்ஜென்சி லைட்டுக்கு சார்ஜ் போட்டியா, பிரட் பேக்கட் வாங்கிட்டியா, எல்லாம் ரெடிதானே, எதையும் மிஸ் பன்னலியே.
|
மழை வெள்ளம் பாவம்
மழை வெள்ளத்தை திட்டாதீர்கள்
திருடப்பட்ட தன் ஏரிகளையும், குளங்களையும் அது பரிதாபமாக தேடி அலைகிறது.
|
வந்த பின் பயனில்லை
பாதுகாப்புங்குறது வாரதுக்கு முன்னாடி தடுக்கணும் வந்த பிறகு கதறி பயனில்லை ஆண்டவன் தான் உங்களை காக்கணும்
|
ஆனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது
பெரிய அளவு சேதாரம் இல்லேன்னாலும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது .. நிவாரண பணிகளிலில் வழக்கம் போல slow.
|
தவறுகளிலிருந்து பாடம்
உங்களால் மழையை நிறுத்த முடியாது... ஆனால் வெள்ளத்தின் போது நீங்கள் முன்னர் செய்த தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள முடியும்.
|
ஜெயிக்க முடியாது
இயற்கையோடு போராடி ஜெயிக்க முடியாது மண்டுகளா, புரிஞ்சு நடந்து இயற்கைக்கு வழிவிடுங்க இல்ல இப்படியே தண்ணில நீச்சல் அடிங்க 🏊🏊